ஐந்து செல்வங்கள் 
கி. ஆ. பெ. விசுவநாதம்

ஐந்து செல்வங்கள்
கி. ஆ. பெ. விசுவநாதம்

திரு.தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் M.A.B.L.M.O.L அவர்கள்
(அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர்.)

நண்பர் திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்களைத் தமிழுலகம் நன்கு அறியும். தமிழ் மேடையுலகிலும், தமிழ்த்தாள் உலகிலும் சிறப்புடன் காட்சியளித்து மக்கள் மனத்தினைக் கவர்ந்து வருகின்றார்.

தமிழ் நாட்டினையும் தமிழ் மொழியினையும் பற்றி எண்ணிவரும் ஒரு சிலரில் இவர் ஒருவர். இவர் எழுதிய ஐந்து கட்டுரைகள், “ஐந்து செல்வங்கள்” என்ற அழகிய பெயரோடு வெளிவருகிறது.

சிறந்த கருத்துக்களை எளிய முறையில் பசுமரத்தாணி போலப் பதிய வைப்பதில் ஆசிரியர் சிறந்து விளங்குகிறார்.

நண்பர் ஒரு செல்வர்; செல்வங்களைப்பற்றி எழுதுகின்றார். அவர் உயிர்போல் போற்றுகிற தமிழில் எழுதுகிறார்.

இதனைச் சிறந்த முறையில் வெளியிடுவது அறிந்து என் மனம் மகிழ்ச்சியடைகிறது. தமிழ் மக்கள் இந்நூலைப் பெரிதும் பயன்படுத்திக் கொள்வார்கள் என நம்புகிறேன்.

தெ. பொ. மீனாட்சிசுந்தரனார்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *