

பதினெட்டாம் பெருக்கு
ந. பிச்சமூர்த்தி
பதினெட்டாம் பெருக்கு ந. பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை தொகுதி. இருபது ஆண்டுகளுக்கு முன் வெளியானது. முதல்பதிப்பு குறைந்த பிரதிகளே அச்சிடப்பட்ட புத்தகம், எவ்வளவோ இலக்கிய வாசகர்கள் கண்ணில் பட்டதே இல்லை. இருபது ஆண்டுகள் கழித்து இரண்டாவது பதிப்பு வெளிவருகிறது.
தமிழ் சிறுகதைத் துறையில் விரல்விட்டு எண்ணக் கூடிய சிறந்த கதைக்காரர்களில் ந. பிச்சமூர்த்தி ஒருவர் என்பதை ‘பதினெட்டாம் பெருக்கு’ தொகுப்பு நிரூபிக்கும். நானாவித அனுபவங்களை கலைநயத்துடன் வெளியிடும் ஒரு முதிர்ந்த கலைஞன் உணர்வை, பார்வையை, வெளியீட்டு சக்தியை இவைகளில் காணலாம்.
இந்த கதைகள் சுதேசமித்திரன், மணிக்கொடி, கலைமகள் முதலிய பத்திரிகைகளில் வெளியானவை.
சி. சு. செல்லப்பா



