
கிழக்கும் மேற்கும் – அ. ச. ஞானசம்பந்தன்

கிழக்கும் மேற்கும் அ. ச. ஞானசம்பந்தன் 1969ஆம் ஆண்டு பூ.சா.கோ.நிறுவனத்தார் புரவலர் திரு. அரங்கசாமி நாயுடு அவர் களின் நினைவுச் சொற்பொழிவுகளை நிகழ்த்துமாறு அழைத்தனர்; அவர்களே இத்தலைப்புக்களையும் தந்து பேசுமாறு பணித்தனர். தமிழாசிரியனின் எல்லைக்கு அப்பாற்பட்டுள்ள இத்தலைப்புக்கள் என்னை வியப்படையச் செய்தன. எனினும், ஒரு தமிழ் மாணவன் இத்தலைப்புக்களைப் பற்றி எவ்வாறு சிந்திக்கின்றான் என்பதை அறியும்…

