freetamilbooks.com

freetamilbooks.com

சிற்றம்பலம் – கி. வா. ஜகந்நாதன்

சிற்றம்பலம் கி. வா. ஜகந்நாதன் சைவத் திருமுறைகள் பன்னிரண்டிலும் முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தப் பெருமான் திருவாய் மலர்ந்தருளியவை. இந்த மூன்று திருமுறைகளிலும் இப்போதுள்ள பதிகங்கள் 383. இவற்றில் முதல் திருமுறையில் 136 திருப்பதிகங்களும், இரண்டாம் திருமுறையில் 122 பதிகங்களும், மூன்றாந் திருமுறையில் 125 பதிகங்களும் அடங்கியுள்ளன. திருமுறைகண்ட புராணத்தில் நம்பியாண்டார் நம்பிகள், “பண்புற்ற திருஞான…

ஞானக் கொழுந்து – கி. வா. ஜகந்நாதன்

ஞானக் கொழுந்து கி. வா. ஜகந்நாதன் சைவத் திருமுறைகள் பன்னிரண்டில் பத்தாவதாக அமைந்தது திருமந்திரம். இதனை இயற்றியவர் திருமூலர். அவர் கைலாயத்தில் திருநந்திதேவருடைய திருவருள் பெற்ற சிவயோகிகளுள் ஒருவர். அவர் அணிமாதி சித்திகள் எட்டும் கைவரப் பெற்றவர். பொதிகை மலையில் வாழும் அகத்தியருக்கு நண்பர். தென்னாடு சென்று அம் முனிவருடன் சில காலம் இருந்து வரலாம்…

பதினெட்டாம் பெருக்கு – ந. பிச்சமூர்த்தி

பதினெட்டாம் பெருக்கு ந. பிச்சமூர்த்தி பதினெட்டாம் பெருக்கு ந. பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை தொகுதி. இருபது ஆண்டுகளுக்கு முன் வெளியானது. முதல்பதிப்பு குறைந்த பிரதிகளே அச்சிடப்பட்ட புத்தகம், எவ்வளவோ இலக்கிய வாசகர்கள் கண்ணில் பட்டதே இல்லை. இருபது ஆண்டுகள் கழித்து இரண்டாவது பதிப்பு வெளிவருகிறது. தமிழ் சிறுகதைத் துறையில் விரல்விட்டு எண்ணக் கூடிய சிறந்த கதைக்காரர்களில்…

பசி – க. நா. சுப்ரமண்யம்

பசி க. நா. சுப்ரமண்யம் இந்த நாவலுக்கு ஏனோ தெரியவில்லை ஆசிரியர் பசி என்று பெயர் வைத்து விட் டார். வேறு எந்தப் பெயர் வைத்திருந்தாலும் பொருந்தும் என்றுதான் தோன்றுகிறது. பசிதான் உலகத்தின் நியதி என்பதே ஆசிரியரின் கட்சி. மனிதனின் பசிகளைத் தீரித்து விடுவதென்பது வெறும் லக்ஷ்யவாதிகளின் கனவே தவிர வேறு அல்ல. சாமாவின் பசிகள்…

பழந்தமிழர் அரசியல் – சாமி. சிதம்பரனார்

பழந்தமிழர் அரசியல் சாமி. சிதம்பரனார் பழந்தமிழர் அரசியல் என்னும் இந்நூல் பல கட்டுரைகளின் தொகுப்பு. கரந்தைத் தமிழ்ச் சங்கத்திலிருந்து வெளிவரும் தமிழ்ப் பொழில் என்னும் மாதப் பத்திரிகையில் நான் எழுதிவந்த கட்டுரைகளின் ஒரு பகுதி. பண்டைத் தமிழகத்தில் மன்னர் ஆட்சிதான் நிலைத் திருந்தது. அவர்கள் ஆளும் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் சர்வாதிகாரிகளாகத்தான் விளங்கினார்கள். பண்டைத் தமிழ்…

மந்திரங்கள் என்றால் என்ன? – அ. ச. ஞானசம்பந்தன்

மந்திரங்கள் என்றால் என்ன? அ. ச. ஞானசம்பந்தன் இன்றைய உலகில் எந்தப் பகுதியில் வசிப்பவர் களாக இருப்பினும் நம் அனைவருக்கும் பொதுவாக ஒன்று இருப்பதை அறிய முடியும். வறியவர், செல்வர், இளையவர், முதியவர், செல்வம் மிகுந்த நாட்டில் வசிப்பவர், வறுமை மிகுந்த நாட்டில் வசிப்பவர், நாகரிகம் மிகுந்த நாட்டில் வசிப்பவர், அல்லாத பகுதிகளில் வசிப்பவர், கற்றவர்,…

கண்ணகி வரலாறும், கற்புமாண்பும் – ந. மு. வேங்கடசாமி நாட்டார்

கண்ணகி வரலாறும், கற்புமாண்பும் ந. மு. வேங்கடசாமி நாட்டார் ‘செந்தமிழ்ச்செல்வி’ ௩, ச-ம் சிலம்புகளில் ‘கண்ணகி கற்பு மாண்பு’ என்னும் பெயருடன் வெளிப் போந்த கட்டுரையைப் பிற்பகுதியாகவும், புதுவதாக எழுதிய கண்ணகி வரலாற்றை முற்பகுதியாகவும் கொண்டுள்ளது இவ்வுரை நூல். கண்ணகி வரலாறு என்பது சிலப்பதிகாரத்தின் கதைச்சுருக்கமே. இஃது இயற்கை வருணனைப் பகுதிகளிலும், துதி முதலியவற்றிலுமிருந்து எடுத்த,…

அமுத மொழிகள் – குன்றக்குடி அடிகளார்

அமுத மொழிகள் – குன்றக்குடி அடிகளார் ‘மூத்தோர் சொல் அமிர்தம்’ என்னும் ஒரு பழமொழி உண்டு ! அறிஞர் தவத்திரு அடிகளார் அவர்கள் பேச்சும் எழுத்தும் அமுதத்தை ஒத்த அருள் மொழிகள் ஆகும். அவரது கருத்துக்களை ஒன்று திரட்டி ‘அமுதமொழிகளாக ‘ வெளிவருகிறது இந்த நூல். இனிய கருத்துக்கள், சிந்தனை தரும் முத்துக்கள், அத்துணையும் தேன்…

ஆலயங்கள் சமுதாய மையங்கள் – குன்றக்குடி அடிகளார்

ஆலயங்கள் சமுதாய மையங்கள் குன்றக்குடி அடிகளார் தமிழர் நாகரிகம் திருக்கோயில்களை மையமாகக் கொண்டது. இந்த உண்மையினைத் திருக்கோயில் கல்வெட்டுகளும் திருமுறைகளும் எடுத்துக் கூறுகின்றன. புதுமை என்பது சூன்யத்திலிருந்து தோன்றுவதில்லை. முதிர்ந்த பழைமைதான் ஒரு புதுமையைப் பிரசவிக்கிறது. இதுவே வரலாற்றுண்மை. சிலர் பழைமையை மலடாக்கிப் புதுமையின் விரிவைத் தடை செய்து வருகின்றனர். இது வளரும் போக்குடைய வரலாற்றுக்கு…

ஸ்ரீ ராமகிருஷ்ணர் – ஒரு தீர்க்கதரிசி – வெ. சாமிநாத சர்மா

ஸ்ரீ ராமகிருஷ்ணர் – ஒரு தீர்க்கதரிசி வெ. சாமிநாத சர்மா கடவுளோடு இரண்டறக் கலந்து வாழக் கூடிய பக்குவம் பெறாதவர்கள், கடவுளோடு கலந்து வாழ்கின்றவர்களோடவாவது வாழ முயற்சி செய்ய வேண்டும் என்று சொல்வார்கள் அறிஞர்கள். இப்படி முயற்சி செய்தால் நமது மனம் ஒழுங்குபடும். அது, தன்னுடைய இஷ்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்லாமல் நம்முடைய இஷ்டத்திற்கு அது…