freetamilbooks.com

freetamilbooks.com

ஆட்கொல்லி – க. நா. சுப்ரமண்யம்

ஆட்கொல்லிக. நா. சுப்ரமண்யம் ஏதோ ஒரு உறவினர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போன போது அங்கு பிள்ளை வீட்டாருடன் உற்றார் உறவினர் என்று சொல்லிக் கொண்டு அதிகம் பேர் வந்திருக்கவில்லை என்று கவனித்தேன். ஏன், என்ன என்று விசாரித்த போது ஒரு உண்மை தெளிவாயிற்று அவர்கள் பணக்காரர்கள்; பணம் சேர்க்கிற காரியத்தில் மும்முரமாக இருந்த அவர்கள் உற்றார்…

காக்கைகளும் கிளிகளும் – ந. பிச்சமூர்த்தி

காக்கைகளும் கிளிகளும் ந. பிச்சமூர்த்தி தற்கால தமிழ் இலக்கியத் துறையில் சிறுகதை, கவிதை ஆகிய இரு பிரிவுகளும் வளம் பெருக கணிசமாக பங்கு செலுத்தி இருப்பவர் ந.பிச்சமூர்த்தி. அவரது நாலைந்து சிறுகதை தொகுப்புகளும் இரண்டு கவிதை தொகுப்புகளும் ஒரு நாடகமும் வெளி வந்திருக்கின் றன. அவர் இவை தவிர பல எழுதி இருக்கிறார். ஓரங்க நாடகங்கள்,…

தஞ்சை வீழ்ச்சி – கா. ந. அண்ணாதுரை

தஞ்சை வீழ்ச்சி கா. ந. அண்ணாதுரை பகுதி: 1 சிங்கம் இரை கிடைக்காது திகைத்தாலும், சிறு நரிக்கு எங்கேனும் ஏதேனும் இரை கிடைத்துவிடும் என்பர்! வீரர்கள் வாழ்வு இழந்து, தாழ்வு தீண்டிடும் வேதனை நிலை பெறுவதுண்டு – வஞ்சகர்களோ எப்படியோ, எதைச் செய்தோ, வாழ வழி அமைத்துக் கொள்வர். இந்தச் சோகச் சுமையை, தமிழக வரலாற்றுச்…

அகத்தியன் விட்ட புதுக்கரடி –  பாரதிதாசன்

என் முன்னுரை தமிழகத்தை – திராவிட நாட்டைத் தம் வழிப்படுத்த முதன்முதல் தமிழகத்தை அடைந்த ஆரியர் கூட்டத்தின் தலைமைப் பாதிரிதான் அகத்தியன். அவன் தமிழகத்தில் வந்து தமிழ்ப் புலவர்பால் தமிழைக் கற்றுக் கொண்டான். வாலை யவிழ்த்தான். முற்பிறப்பில் செய்த நல்வினைப் பயனே ஒருவன் அரசனாகி யிருப்பது என்றான். பலவாறு அந்நாள் ஆளவந்தாரைப் பிடிக்க ஏற்றவாறு புளுகினான். …

திருவெம்பாவை – கி. வா. ஜகந்நாதன்

திருவெம்பாவை கி. வா. ஜகந்நாதன் பாவை நோன்பு தமிழ்நாட்டில் நவராத்திரிக் காலத்தில் பெண்கள் பசுவைப் போல ஒரு பொம்மை செய்வது உண்டு. அதற்கு அலங்காரம் செய்து, கோலாட்டம் போட்டு வீடுதோறும் எண்ணெய், பணம் முதலியவற்றை வசூல் செய்வார்கள். அதுபோல் பழங்காலத்தில் மார்கழி மாதம் முழுவதும் நெய், பால் முதலியவை உண்ணாமல் விரதம் இருந்து தை மாதத்தில்…

இராமன் கதை – பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி

இராமன் கதைபிரான்ஸிஸ் கிங்ஸ்பரி 1. பிறப்பும் இளமையும் ஆரியவர்த்தத்திலே கங்கையாற்றுக்கு வடக்கே உள்ளது கோசலை நாடு. அதற்கு இராசதானி அயோத்தி. அங்கே தசரதன் என்னும் வேந்தர்வேந்தன் பல்லாண்டு செங்கோல் செலுத்திவந்தான். அவன் அறங்கிடந்த நெஞ் சினன், மன்னுயிரைத் தன்னுயிர் போல நேசிப்பவன், கொடையிற் கற்பகத்தை வென்றவன், பொய்க்குப் பகை, மெய்க்கு அணி, புகழுக்கு வாழ்வு. இவனுக்கு…

சமரச தீபம் – திரு.வி. கலியாணசுந்தரனார்

சமரச தீபம்திரு.வி. கலியாணசுந்தரனார் உலகம்‌ இப்பொழுது எந்நிலையில்‌ இருக்கிறது? அதைச்‌ சொல்லலும்‌ வேண்டுமோ! உலகம்‌ இயற்கைச்‌ சன்மார்க்கத்தி னின்றும்‌ வழுவிச்‌ செயற்கைத்‌ துன்மார்க்கத்தில்‌ வீழ்ந்து வருகிறது. இது கண்கூடு. இவவீழ்ச்சிக்கு அடிப்படையான காரணம்‌ என்னை? மக்கள்‌ அறியாமையால்‌ அரசியலுக்கும்‌, புரோகிதத்துக்கும்‌ அடி மைப்பட்டு இரையாகி வருவதைச்‌ சிறந்த காரணமாகக்‌ குறிக்கலாம். ஆங்காங்குள்ள அரசியல்‌ வாதிகள்‌, பேர்‌,…

மக்கள் தீர்ப்பு – கா. ந. அண்ணாதுரை

மக்கள் தீர்ப்பு கா. ந. அண்ணாதுரை பகுதி: 1 “பொது ஜனம்! மக்களின் தீர்ப்பு! – அர்த்தமற்ற வார்த்தைகள். உன் போன்ற ஏடு புரட்டிகளின் கற்பனைகள். ஏமாளிகளின் நம்பிக்கை! பாமரரின் மனம், ஒரு காலிப்பாண்டம்! யார் எதைப் போட்டாலும், ஏற்றுக் கொள்ளும்! அதிலும், உனக்கு வேடிக்கை தெரியாது – அந்தப் பாண்டமும் ஓட்டை! போட்ட பண்டம்…

பிடிசாம்பல் – கா. ந. அண்ணாதுரை

“சாம்பல்! சாம்பல்! சாளுக்கிய நாடு சாம்பலாயிற்று! சாளுக்கிய மன்னன் பிணமானான், களத்தில்! முடிவிலொரு பிடிசாம்பலானான்! முடிவிலொரு பிடி சாம்பல்!

தப்பிவிட்டார்கள் – கலைஞர் மு. கருணாநிதி

தப்பிவிட்டார்கள் கலைஞர் மு. கருணாநிதி ‘தப்பிவிட்டார்கள்’ – சமூகத்தின் உண்மைப் பிரதிபலிப்புகள் நிறைந்த கதைத் தொகுதி. சமுதாயக் கொடுமையினின்று தப்பிவிட்டவர்கள், அண்ணனென எண்ணி ஆசைப்பார்வை பார்த்தவளை தன்காமத்துக்குப் பலியாக்க எண்ணும் சபலக்காரர்கள், சமூகத்தின் கோரப்பிடியால் குற்றம்சாட்டப்படும் நிரபராதி, உதவி செய்ய வந்தவரிடமே ஏமாற்று வித்தையைக் காட்டி பின் தானே மற்றொருவனால் ஏமாற்றப்படும் மோசக்காரன் ஆகிய சமூக…