freetamilbooks.com

freetamilbooks.com

இறைவர் திருமகன் – நாரா. நாச்சியப்பன்

இறைவர் திருமகன் நாரா. நாச்சியப்பன் கடவுளின் பிள்ளை என்றும் இறையரசு நிறுவ வந்த திருமகன் என்றும் பெருமையாகப் பேசப்படுகின்ற இயேசு நாதரின் கதை இது. இயேசுநாதரின் வரலாறு கேட்டால் நெஞ்சம் உருகும். உலகில் ஏழைஎளியவர்களுக்காகவும், உண்மையான கடவுள் நம்பிக்கையை வளர்ப்பதற்காகவும் அவர் அடைந்த துன்பங்களின் தொகுப்பே அவருடைய வாழ்க்கையாகும். மனித குலத்தின் உயர்வுக்காகத் தம் துன்பங்களைப்…

இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் – நா. வானமாமலை

இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் நா. வானமாமலை தூத்துக்குடியில் மார்க்சீயம் கற்க விரும்பிய படிப்பாளிகள் குழுவிற்காக நான் “இந்திய நாத்திகமும், மார்க்சீயமும்” என்ற தலைப்பில் குறிப்புகள் தயாரித்தேன். இந்திய நாத்திகம் பற்றிய விவரங்கள் (facts) முழுவதும் மார்க்சீயப் பேரறிஞர் தேபி பிரஸாத் சட்டோபாத்யாயாவின் ‘Indian Atheism’ என்னும் நூலில் இருந்து பெறப்பட்டவை. ஆனால் இந்நூல் அந்நூலின்…

இன்ப மாலை – கி. வா. ஜகந்நாதன்

இன்ப மாலை கி. வா. ஜகந்நாதன் சங்க நூல்களில் எட்டுத் தொகை என்னும் வரிசை யில் ஒன்றாகிய அகநானூறு அகப்பொருள் பற்றிய நானூறு செய்யுட்களை உடையது. இதனை அகமென்றும், அகப்பாட்டென்றும் சொல்வது உண்டு. பல புலவர்களின் அகத்துறைப் பாடல் தொகுதிகளாகிய குறுந் தொகை, நற்றினை, அகநானூறு என்ற மூன்றில் அடியளவினால் நீண்ட பாடல்களை உடையதாதலால் இதற்கு…

என்னுரை – சாவி

என்னுரை சாவி என்னுடைய கெழுதகை நண்பரும் எழுத்தாளர்களில் தனக்கென ஒரு நிலையான இடத்தைப் பிடித்துக் கொண்டிருப்பவருமான திரு.சாவி அவர்கள், ”குங்குமம்’ இதழில் கிழைமைதோறும் தொடர்ந்து எழுதி வந்த கட்டுரைகளையும், மேலும் சில கட்டுரைகளையும் தொகுத்து ஒரு நூலாகத் தந்துள்ளார். அவர் குங்குமத்தில் எழுதத் தொடங்கும்போதே, அதற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று என்னைக் கேட்டபோது, நான்தான்…

எனது நண்பர்கள் –

எனது நண்பர்கள் கி. ஆ. பெ. விசுவநாதம் இந்நூலிற் காணப்பெறுகின்ற பெருமக்களிற் சிலர்தான் என் நண்பர்கள். சிலர் என் ஆசிரியர்களும், சிலர் என் அரசியற் தலைவர்களும் ஆவர். என்றாலும், அவர்களில் எவரும் என்னை மாணவனாகவோ, தொண்டனாகவோ கருதாமல் நண்பனாகவே கருதிப் பழகி வந்தவர்கள். இவர்களில் எவருடைய வரலாற்றையும் நான் முழுமையாக எழுதிவிடவில்லை, எழுதவும் என்னால் இயலாது.…

தெய்வ அரசு கண்ட இளவரசன் – நாரா. நாச்சியப்பன்

தெய்வ அரசு கண்ட இளவரசன் நாரா. நாச்சியப்பன் போதி மரத்தடியில் ஞான மடைந்த மாதவச் சுடர் மணிதான் புத்த பெருமான். இன்ப வாழ்வு நிறைந்த அரண்மனையிலே பிறந்து அரசபோகத்தை அனுபவித்து வளர்ந்த புத்த பெருமான் ஞான மார்க்கத்தில் செல்ல நேர்ந்ததே, அவருடைய ‘தன்னைப் போல் பிரரையும் எண்ணும்’ சமத்துவ தத்துவம் தான். பிறர் துயர் கண்டு…

அதிசயப் பெண் – கி. வா. ஜகந்நாதன்

அதிசயப் பெண் கி. வா. ஜகந்நாதன் கலைமகள் ஆசிரியர் உயர்திரு கி. வா. ஜகந்நாதன் அவர்களைத் தமிழ் உலகம் நன்றாக அறியும். இணையற்ற ஆசிரியராக விளங்கும் அவர்கள் அவ்வப்போது குழந்தைகளுக்காக எழுதிய கதைகள் இவை. தமிழ்த் தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்களுடைய அன்புக்குகந்த மாணவராகப் பயின்ற ஆசிரியர் அவர்கள் அந்த மரபிலேயே தமிழ்…

அப்பம் தின்ற முயல் – நாரா. நாச்சியப்பன்

அப்பம் தின்ற முயல் நாரா. நாச்சியப்பன் ”முயல் குட்டியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? வெள்ளை வெளேரென்று பனி நிறத்தில் எவ்வளவு அழகாக இருக்கிறது. அதன் கண்களும் காதுகளும் எவ்வளவு அழகாக இருக்கின்றன. அது துள்ளிப் பாயும் போது மின்னல் பறப்பது போல் இருக்கும். அவ்வளவு வேகமாகப் பாயும். இவ்வளவு அழகான பத்து முயல் குட்டிகளை வைத்து திரு.…

அசோகர் கதைகள் – நாரா. நாச்சியப்பன்

அசோகர் கதைகள் நாரா. நாச்சியப்பன் மாமன்னர் அசோகர் இந்திய வரலாற்றில் பெற்றுள்ள இடம் பெரியது. நாடுகள் பலவற்றைக் கட்டியாண்ட பெரு மன்னர் என்பதோடு, கலிங்கப் போரிலே அவர் கொண்ட பெருத்த மனமாற்றமும் கூடி அவருக்குப் பெருஞ்சிறப்பை யளித்தது. ⁠மாமன்னர் அசோகர் மனமாற்றம் கொண்ட பிறகுங் கூட அவருடைய பேரரசு எவ்விதக் குறையும் குறைவும் அற்று விளங்கியது…

ஆறு செல்வங்கள் – கி. ஆ. பெ. விசுவநாதம்

ஆறு செல்வங்கள் கி. ஆ. பெ. விசுவநாதம் மலர்கள் பலவகை, அவற்றுட் சில, அழகுமட்டும் கொண்டு, காண்பார் கண்களைக் கவரும்; சில குறைந்த அழகும் நிறைந்த மணமும் உடையவாய்க் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கும். அழகும் சுவையும் மணமும் ஆய்வதில் அருந்திறன் வாய்ந்தவை தேனீக்கள். அவை, “இணரூழ்த்தும் நாறா மலர்” களை நாடாது, கண்ணைக் கவர்ந்து சுவையும்…