freetamilbooks.com

freetamilbooks.com

கண்ணடக்கம் – கலைஞர் மு. கருணாநிதி

கண்ணடக்கம் கலைஞர் மு. கருணாநிதி கண்ணடக்கம் பக்தன் ஒருவன் பதைக்கப் பதைக்க ஓடினான். அவன் கால்கள் தடுமாறின. வியர்வையால் மேனி குளமாயிற்று தலைமுடி அலங்கோலமாய் விரிந்து காற்றில் பறந்தது. நெற்றியிலே பூசியிருந்த திருநீறும், அதன் மேல் வைத்திருந்த அகலமான குங்குமப் பொட்டுங் கூட வியர்வையிலே கரைந்து ரத்தமும் சீழும் போல அவன் கன்னங்களில் வழிந்து கொண்டிருந்தன.…

திருவள்ளுவர் – சோமசுந்தர பாரதியார்

திருவள்ளுவர் சோமசுந்தர பாரதியார் தமிழகத்தில் தலைநின்ற தமிழ்ச்சான்றோர் பலரையும் பற்றி அவர் குடிப்பழிப்பான பல ஆபாசக் கதைகள் சமீப காலங்களில் எழலாயின. திருவள்ளுவர், நக்கீரர், கம்பர் முதலிய பெரியாரை யெல்லாம் எளிதில் வேளாப் பார்ப்பன ஆண்டிகளுக்கு இழிகுலப் பெண்டிரீன்ற மக்களெனச் சிலர் கதைக்கின்றனர். எனினும் இக் கதைப்பவர் துணிவைவிட, அக்கதைகளைச் சிறிதும் தடையின்றியேற்கும் தமிழ்மக்களின் தற்கால…

வர்ணாஸ்ரமம் – கா. ந. அண்ணாதுரை

வர்ணாஸ்ரமம்கா. ந. அண்ணாதுரை சர் சண்முகம் அவர்கள் இதுபோது வகித்து வரும் ‘பதவி’ யினின்றும் விலக இருப்பதாக ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது. அந்தச் செய்தியுடன், பலர் தமது ‘ஆசை’யையும் இணைத் துப் பார்க்கிறார்கள். அதாவது பதவியை விட்டுவிட்டு சர் சண்முகம், தமிழருக்குத் தலைமை தாங்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆவல். அவ்வித ஆவல் கொண்டவர்களில்…

பாசமுள்ள நாய்க்குட்டி – நாரா. நாச்சியப்பன்

பாசமுள்ள நாய்க்குட்டி நாரா. நாச்சியப்பன் 1. பெருமை பேசிய பனிக்கட்டி ஒரு நாள் காற்று வலுவாக வீசியது. பல மரங்கள் சாய்ந்து விட்டன.ஊரெங்கும் ஒரே புழுதியாக இருந்தது. கொடிமரங்கள் அறுந்து போயின. மக்கள், பறவைகள், விலங்குகள் யாவும் வெளியில் நடமாட முடியாமல் தவித்தன. காற்று நிமிர்ந்து பார்த்தது. “உலகத்தில் நான் தான் பெரியவன். எல்லாரும் எனக்குப்…

பாண்டவர் கதை – பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி

பாண்டவர் கதைபிரான்ஸிஸ் கிங்ஸ்பரி இந்நூல் சிறுவர் சிறுமியர்பொருட்டு எழுதியது. மகாபாரதம் வடமொழியிற் பதினெட்டுப் பருவமுடையது. தமிழிற் பெருந்தேவனார் கி. பி. தொள்வது நூற்றாண்டிற் பாரதவெண்பா இயற்றினார். அதிற் சிறிது பாகமே நம் கைக்கெட்டியது ; எஞ்சியவெல்லாம் அழிந்தொழிந்தன. அதன்பின் கி.பி. பதினைவது நூற்றாண்டில் வில்லிபுத்தூரர் விருத்தப்பாவால் மகாபாரதம் வகுத்தனர். இவர், பதினெட்டுப் பருவத்தில் முதற்பத்தையே கொண்டார்…

நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும் – பம்மல் சம்பந்த முதலியார்

நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும் பம்மல் சம்பந்த முதலியார் நான் பிறந்தது 1-2-1873, தற்காலம் எனக்கு 83 வயது முடிந்து 84-வது வயது நடக்கிறது. சாதாரணமாக மனித வாழ்வில் அதிலும் இந்தியர் வாழ்வில் இது நீடித்த வாழ்வு என்று கூற வேண்டும், இத்தனை வருடங்கள் இவ்வுலகில் நான் வாழ்ந்து இருந்ததற்கு முக்கிய காரணம் எல்லாம் வல்ல…

மணமக்களுக்கு – கி.ஆ. பெ. விசுவநாதம்

மணமக்களுக்கு கி.ஆ. பெ. விசுவநாதம் தமிழ் மக்கள், தமிழ் மரபின்வழி திருமணம் செய்துகொண்டு, சீரும் சிறப்புமாக, இல்லற வாழ்வில், புகழோடும் வளமோடும் வாழ வேண்டும். இந்த நன்மரபுக்கு, முத்தமிழ்க் காவலரும் முதுபேரறிஞருமாகிய கி. ஆ. பெ. வி. அவர்கள் வழிகாட்டுகின்றார்கள். இந்நூல் அவர்கள் பல திருமணங்களை நடத்தி வைத்துப் பேசிய பேச்சுக்களின் தொகுப்பாகும். திருமணம் செய்து…

குசேலர் சரிதம் – சி. கணேசையர்

குசேலர் சரிதம் சி. கணேசையர் குசேலர் சரிதம் என்னும் இந்நூற்கு முதனூல் தமிழிலே, வல்லூர்த் தேவராச பிள்ளையால் இயற்றப் பட்ட குசேலோபாக்கியானம் என்னும் நூலாகும். அஃது செய்யுள் நடையில் இயற்றப்பட்டதாதலின் கற்றோ ரன்றி மற்றோரால் எளிதிலுணர்ந்து பயன்பெற முடியாததாகும். அதனால் அதனை, ஓர் உரை நடை நூலாக எழுதின் யாவர்க்கும் பயன்படுமென்று கருதி, அவ்வாறே இதனை…

குமரிக்கோட்டம் – கா. ந. அண்ணாதுரை

குமரிக்கோட்டம் கா. ந. அண்ணாதுரை காலம் மாறுகிறது என்பதை அறிய மறுக்கும் வைதீகர்களில் சிலருக்குத் தமது சொந்த வாழ்க்கை யிலேயே, நேரிடும் சிலபல சம்பவங்கள், மனமாற்றத்தை ஆச்சரியகரமான விதத்திலும் வேகத்துடனும் தந்து விடுகின்றன. ‘குமரிக்கோட்டம் ‘ இக் கருத்தை விளக்கும் ஓர் கற்பனை ஓவியம். இதிலே காணப்படும் சீறும் தந்தை, வாதிடும் மகன், வசீகர மங்கை,…

கோவூர் கிழார் – கி. வா. ஜகந்நாதன்

கோவூர் கிழார்கி. வா. ஜகந்நாதன் 1. சோழன் நலங்கிள்ளி “இப்போது பட்டத்துக்கு வந்திருக்கும் மன்னன் இளமையுடையவன் என்று சொல்கிறார்களே!” “சொல்கிறது என்ன? இளமையை உடையவன்தான். அதனால் என்ன? சிங்கத்தின் குட்டியென்றால் யானையை வெல்லாதா?” “எத்தனையோ வீரச் செயல்களைச் செய்து தம் வெற்றியைப் பிற நாடுகளிலும் நாட்டிய மன்னர்கள் பிறந்த குலம் ஆயிற்றே, சோழகுலம்! இந்தக் குலத்தின்…