freetamilbooks.com

freetamilbooks.com

ஞானரதம் – சி. சுப்பிரமணிய பாரதியார்

ஞானரதம் – சி. சுப்பிரமணிய பாரதியார் பீடிகை பின்மாலைப் பொழுது. திருவல்லிக்கேணி, வீரராகவ முதலித் தெருவில்கடற்பாரிசத்தை நோக்கியிருக்கும் ஓர் விட்டு மேடையின் மீது சிரமபரிகாரத்தின்பொருட்டு ஓர் மஞ்சத்தின்மீது படுத்துக் கொண்டிருந்தேன். ஆனந்தகரமானகடற்காற்று, நான் படுத்திருந்த முன்னறையிலே நான்கு பக்கங்களிலிருந்தும்,கண்ணாடிச் சாளரங்களின் மூலமாகவும், புறக்கதவு நிலைகளின் மூலமாகவும்,வந்து நிரம்பிய வண்ணமாக இருந்தது. அந்தக் காற்றும் பின்மாலை யொளியும்கலந்ததினால் உண்டாகிய…

வள்ளலார் வகுத்த வழிகள் – பாலூர் கண்ணப்ப முதலியார்

வள்ளலார் வகுத்த வழிகள் பாலூர் கண்ணப்ப முதலியார் வள்ளலார் என்று இங்குக் குறிப்பிடப்பட்டவர் வடலூர் இராமலிங்க சுவாமிகளே ஆவார். இவர் மக்கள் நல்வழியில் சென்று உய்யும் பொருட்டுத் திருவருட்பா என்னும் சீரிய நூலைப் பாடி அருளியதோடு நில்லாமல், பற்பல உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார். அவ்வுரைநடை நூல்களில் அமைந்துள்ள கருத்துக்கள் அருமையும் பெருமையும் வாய்ந்தவை. ஆனால், மக்கள்…

கிழக்கும் மேற்கும் – அ. ச. ஞானசம்பந்தன்

கிழக்கும் மேற்கும் அ. ச. ஞானசம்பந்தன் 1969ஆம் ஆண்டு பூ.சா.கோ.நிறுவனத்தார் புரவலர் திரு. அரங்கசாமி நாயுடு அவர் களின் நினைவுச் சொற்பொழிவுகளை நிகழ்த்துமாறு அழைத்தனர்; அவர்களே இத்தலைப்புக்களையும் தந்து பேசுமாறு பணித்தனர். தமிழாசிரியனின் எல்லைக்கு அப்பாற்பட்டுள்ள இத்தலைப்புக்கள் என்னை வியப்படையச் செய்தன. எனினும், ஒரு தமிழ் மாணவன் இத்தலைப்புக்களைப் பற்றி எவ்வாறு சிந்திக்கின்றான் என்பதை அறியும்…

மகான் குரு நானக் – என். வி. கலைமணி

மகான் குரு நானக்என். வி. கலைமணி 1. யோகி குருநானக்! தமிழ்நாட்டில் எண்ணற்ற சித்தர்கள் தோன்றி, தொண்டாற்றி மறைந்துள்ளர்கள். தமிழ்த் தென்றல் திரு.வி.க. கூறுவதைப் போல “திருமூலர் பெருமானைப் போன்ற பல சித்தர்கள் இன்றும் நம்மிடையே வாழ்கிறார்கள். கைலாய மலையின் அடித்தளத்திலே மட்டும் அவர்கள் பூத உடலோடு வாழவில்லை. அம்மலைக்கு மேலே சிவபெருமானோடு என்றுமே அருகிருந்து…

முருகன் அல்லது அழகு – திரு. வி. கலியாணசுந்தரனார்

முருகன் அல்லது அழகு திரு. வி. கலியாணசுந்தரனார் குமரகுருபரர் உலகு குளிர எமது மதியில் ஒழுகு மமுத கிரணமே                உருகு மடிய ரிதய நெகிழ உணர்வி லெழுந லுதயமேகலையு நிறைவு மறிவு முதிர முதிரு மதுர நறவமே                கழுவு துகளர் முழுக நெடிய கருணை பெருகு சலதியேஅலகில் புவன முடியும் வெளியில் அளியு மொளியி னிலயமே               …

எல்லாம் தமிழ் – கி. வா. ஜகந்நாதன்

எல்லாம் தமிழ் கி. வா. ஜகந்நாதன் இதற்குமுன் நான் எழுதியுள்ள புது மெருகு என்ற புத்தகத்தைப் போன்றது இது. சங்க நூல்களில் உள்ள குறிப்புக்களைக் கொண்டு பின்னிய வாலாறுகளும், பிற காலத்துச் சதகங்களிலும் தனிப்பாடல்களிலும் உள்ள செய்திகளைக் கொண்டு உருவாக்கிய கதைகளும், கேள்வியினால் தெரிந்தவற்றை ஆதாரமாகக் கொண்ட கதைகளும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்றன. தமிழ்ப்…

அண்ணா ஜோதி – கலைஞர் மு. கருணாநிதி

அண்ணா ஜோதி கலைஞர் மு. கருணாநிதி உடன்பிறப்பே, காலை வெயில் என்றாலும் கடுமையாகக் கொளுத்திக் கொண்டிருக்கிறது! நாங்கள் செல்லும் கார், திருச்சியிலிருந்து கரூரை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது! வழியில் சாலையில் ஒரு இளைஞன் கரூர் நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறான்! அவன் கையில் கொழுந்து விட்டெரியும் ஒரு தீச் சுடர்! நெருப்பு, நிமிர்ந்து நின்றுதானே எரியும் உண்மையான…

ஆனந்தத் தேன் – கி. வா. ஜகந்நாதன்

ஆனந்தத் தேன் கி. வா. ஜகந்நாதன் முகவுரை தமிழ்நாட்டில் கடவுளை நினைப்பதற்கு வாய்ப்பாகப் பல அமைப்புக்களும், பொருள்களும் வழக்கங்களும் இருக்கின்றன. கோயில்கள், புராணங்கள், நூல்கள் ஆகியவை கடவுளின் நினைவை எப்போதும் பசுமையாக இருக்கும்படி செய்கின்றன. மக்களுக்கு இடும் பெயர்களும், பண்டிகைகளும் நினைவுக்கு உரமூட்டுகின்றன. கடவுள் ஒருவனே என்ற அடிப்படையான உண்மையை நாம் மறப்பதில்லை. ஆனாலும் அன்பர்களின்…

ஆறுமாதக் கடுங்காவல் – கலைஞர் மு. கருணாநிதி

ஆறுமாதக் கடுங்காவல் கலைஞர் மு. கருணாநிதி இது கல்லக்குடியில் போர்க்களம் அமைப்பதற்கான சூழ்நிலைகள் உருவானதிலிருந்து, சிறைவாசம் முடிய – நினைவில் நின்ற நிகழ்ச்சிகள் குறிக்கப்பட்டு திராவிட இயக்கத்தின் வருங்கால சரித்திரத்திற்கு இதுவும் பயன்படலாம் என்ற ஆசையுடன் வெளியிடப்படுகிறது. –பதிப்பகத்தார்