freetamilbooks.com

freetamilbooks.com

கடவுளும் பிரபஞ்சமும் – ம. சிங்காரவேலு

கடவுளும் பிரபஞ்சமும் ம. சிங்காரவேலு நூன்முகம் சென்ற வருடம் நமது தோழர் ஈ. வெ. இராமசாமி அவர்கள், ” குடி அரசு” க்கு மத சம்பந்தமாக செய்துள்ள விஞ்ஞான ஆராய்ச்சிகளின் முடிவினை சில வியாசமாக எழுதக் கேட்டுக்கொண்டனர். நமது அசௌக்கியத்தினிமித்தம், அவர் வேண்டுகோளுக் கிணங்க முடியாமற் போயிற்று. சென்ற இரண்டொரு வருஷங்களில் பிரபஞ்சத்தைப்பற்றிச் சில நவீன…

கண்ணகி கதை – அ. குமாரசாமிப் புலவர்

கண்ணகி கதை அ. குமாரசாமிப் புலவர் சோழ மண்டலத்திலே காவிரிப்பூம்பட்டினம் என்னும் நகரத்திலே மாநாய்கன் என்னும் பெயருடைய செட்டியொருவன் இருந்தான். அச் செட்டியின் மகளாகிய கண்ணகியென்பவள் பொற்பினால் இலக்குமியென்றும், கற்பினால் அருந்ததி என்றும் கண்டோ ரெல்லாங் கொண்டாடிக் கை குவித்து வணங்கத்தக்க மிக்க மேன்மையும் நற்குண நற்செய்கைகளும் பெற்றவளாய்ச் சிறப்புற்று வளர்ந்து பன்னிரண்டாம் வயசென்னும் பருவத்தை…

சித்த மார்க்கம் – திரு. வி. கலியாணசுந்தரனார்

சித்த மார்க்கம் திரு. வி. கலியாணசுந்தரனார் உயிர்கள் தாங்கும் பிறவிகள் பல. அவைகளுள் விழுமியதுமனிதப்பிறவி. “மனிதப்பிறவி விழுமியது” என்று சொல்லாதசான்றோரில்லை. மனிதப்பிறவியில் உள்ளொளி அதாவது ஆத்மசக்திபெருகுதற்குரிய வாய்ப்பு உண்டு. மற்றப் பிறவிகளில் அவ்வாய்ப்பு இல்லை. அதனால் மனிதப்பிறவி விழுப்பமுடையதாகிறது. மக்கள் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைத் தக்கவழியில்பயன்படுத்தல் வேண்டும். உள்ளொளிகாலும் முறையில் மக்கள்வாழ்வை நடத்துவது சிறப்பு. இல்லையேல்,…

சிவபிரான்‌ கருணையுஞ்‌ சீவர்கள்‌ கடமையும்‌ – மு. கதிரேசச் செட்டியார்

சிவபிரான்‌ கருணையுஞ்‌ சீவர்கள்‌ கடமையும்‌ மு. கதிரேசச் செட்டியார் உசிவமயம்திருச்சிற்றம்பலம் (இது, பூவாளூர்ச் சைவ சித்தாந்த சங்கத்தின் ஜந்தாம் வருட நிறைவுக் கொண்டாட்ட காலமாகிய 7 – 3 – 15 – ல் சென்னைப் பிரஸிடென்ஸிக் காலேஜ் தமிழ்ப்பண்டிதர் மஹாமஹோபாத்தியாய ப்ருஹ்மஸ்ரீ வே. சாமிநாதையரவர் கள் அக்கிராசனத்திற் கூடிய வித்துவான்களும் பிரபுக்களும் நிறைந்த மஹா…

சைவ சமய சாரம்‌ – திரு.வி. கலியாணசுந்தரனார்

சைவ சமய சாரம்‌ திரு.வி. கலியாணசுந்தரனார் திருச்சிற்றம்பலம்‌ மெய்ம்மையாம்‌ உழவைச்‌ செய்துவிருப்பெனும்‌ வித்தை வித்திப்‌பொய்ம்மையாங்‌ களையை வாங்கிப்பொறையெனு நீரைப்‌ பாய்ச்சித்‌தம்மையு நோக்கிக்‌ கண்டுதகவெனும்‌ வேலி யிட்டுச்‌செம்மையுள்‌ நிற்ப ராகிற்‌சிவகதி விளைய மன்றே. -அப்பர்‌ காலம்‌ உலகத்திலே பல சமயங்கள்‌ நிலவுகின்றன. அவைகளுள்‌ பெரும்பாலன கால தத்துவத்துக்குக்‌ கட்டுப்பட்டுக்‌ கிடக்கின்றன. கிறிஸ்துவ சமயம்‌, பெளத்த சமயம்‌ முதலிய…

சைவ சித்தாந்த வரலாறு – கா. சுப்பிரமணியபிள்ளை

சைவ சித்தாந்த வரலாறு கா. சுப்பிரமணியபிள்ளை திருச்சிற்றம்பலம்சைவ சித்தாந்த வரலாறு(சிவநெறி வரலாறு) சைவம் சித்தாந்தம் என்ற இரு சொற்களின் பொருளை முதற்கண் ஆராய்ந்து கொண்டு பின் அவ் விரண்டினாலுமாகிய தொடர்மொழிப் பொருளின் வர லாற்றை ஆராய்வாம். சைவம் என்றது சிவம் என்னுஞ் செந்தமிழ்ச் சொல்லடியாய்ப் பிறந்து சிவனொடு தொடர் புடைமை என்னும் பொருளில் வழங்குவது. சிவனைப்…

சைவசித்தாந்த விளக்கச் சுருக்கம் – கா. சுப்பிரமணியபிள்ளை

சிவமயம்திருச்சிற்றம்பலம்சைவசித்தாந்த விளக்கச் சுருக்கம் தோற்றுவாய் உலகத்திலுள்ள பொருள்கள்க. அறிவுள்ளனஉ. அறிவில்லாதன என இருவகைப்படும் –அறிவுள்ளன இயக்குவன.அறிவில்லா தன இயங்குவன. இவ்விரண்டையும் சித்து என்றும், சடம் என்றும் முறையே கூறுப. அறிவுள்ளன யாவும் தாமே பொருள்களை அறிவன வல்ல. தாமே யாவற்றையும் அறியும் கடவுள் ஒருவர் அறிவிக்க, அவை அறியும். அக் கடவுளே சிவபெருமான்.க. அறிவுள்ளன உயிர்கள்.உ.…

தமிழ்நாட்டுச் செல்வம் -திரு. வி. கலியாணசுந்தரனார்

தமிழ்நாட்டுச் செல்வம் திரு. வி. கலியாணசுந்தரனார் தோற்றுவாய் உங்கள் சங்கத்தின் ஆறாம் ஆண்டு விழாவிற்கு என்னைத் தலைமை வகிக்குமாறு விரும்பி அழைத்ததற்குப் பெரிதும் நன்றியறிதலுடையேன். இரண்டாம் ஆண்டு விழாவிற்கு ஈண்டுப்போந்து தலைமை வகித்துப் பேசிய போது எனக்கிருந்த உடல் உரம் இப்பொழுது இல்லாமை குறித்து வருந்துகிறேன். எனது உடல் நிலைகருதி மறுத்து விடலாமா என்றும் எண்ணினேன்.…

நாயன்மார் திறம் – திரு. வி. கலியாணசுந்தரனார்

நாயன்மார் திறம் திரு. வி. கலியாணசுந்தரனார் “நாயன்மார்” என்னும் ஒரு சிறு கட்டுரை 1921- ஆம் வருட “சுதேசமித்திரன்” அநுபந்தத்துக்கென என்னால் எழுதப்பட்டது. அக்கட்டுரை முதன் முறை நூல் வடிவாகக் காரைச் சிவனடியார் திருக்கூட்டத்தார் விரும்பியவாறு 1922-ஆம் ஆண்டில்வெளியிடப்பட்டது. அப்பதிப்பில் பெரு மாறுதல் ஒன்றுஞ் செய்யப்படவில்லை. இரண்டாம் பதிப்பில் சிற்சில மாறுதல்கள் செய்யப்பட்டன; நூலுக்கு “நாயன்மார்…

நினைப்பவர்‌ மனம்‌ – திரு. வி. கலியாணசுந்தரனார்

நினைப்பவர்‌ மனம்‌திரு. வி. கலியாணசுந்தரனார் “குறியே போற்றி குணமே போற்றிநெறியே போற்றி நினைவே போற்றி” – மாணிக்கவாசகர் சகோதரிகளே! சகோதரர்களே! நிலமடந்தையின் நெஞ்சத் தாமரையென்று போற்றப்பெறுத் திருச்சிற்றம்பலம் முதலிய திருப்பதிகளைத் தன்னகத்தேகொண்டு, காலம் விழையுங் குரவன்மார், அடிகண்மார்,அறவோர், துறவோர், நாவலர், பாவலர், முதலியோர் அவ்வப்போது தோன்றுதற்குரிய நிலைக்களன்களுள் ஒன்றாய்த் திகழ்ந்து,மன்பதைக்கு நலஞ்செய்து வரூஉந் தென்னார்க்காடு ஜில்லாவின்ஒரு…