காந்தியும் விவேகானந்தரும்
வெ. சாமிநாத சர்மா

காந்தியும் விவேகானந்தரும் வெ. சாமிநாத சர்மா

செம்பொன் மேனி; சிறிய உருவம்; பெரிய ஆத்மா; உடைந்த பல்; உரத்த சிரிப்பு; ஒற்றையாடை; மூப்படைந்த இளைஞர்; ஓய்வுகாணாத உழைப்பாளி. இவர் காந்தி.

ஆஜானுபாகு; அகன்ற நெற்றி; பரந்த கண்கள்; ரிஷப நடை; அரசனாக ஆளவேண்டியவர்; துவராடை யுடுத்த துறவியானார். உலகத்தைத் துறந்து விட வில்லை; உலகத்திலே வாழ்ந்தார்; உலகத்திற்காக வாழ்ந்தார். இவர் விவேகானந்தர்.

இருவரும் பாரத ஜாதியின் பிரதிநிதிகள்; அதன் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொடுத்தவர்கள்; இந்திய மக்களின் இருதயத்தில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *