

ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும்
ப. ஜீவானந்தம்
நூன்முகம்
திருச்சியில், 1957 டிசம்பர் கடைசி வாரத்தில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகப் பிரதிநிதிகளின் விசேஷ மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி தோழர் ஜீவா பொதுக்கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவே இப்பிரசுரம்.
கம்யூனிஸ்ட் சகாப்தம், ஜாதி ஒழிப்பும் திராவிடக் கழகமும், இந்தி – ஆங்கிலம் – தமிழ் ஆகியவற்றின் இருப்பிடம் ஆகியவைப் பற்றி இதில் நன்கு விளக்கு கிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,
தமிழ்நாடு கமிட்டி,



