Tag திரு. வி. கலியாணசுந்தரனார்

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் – திரு. வி. கலியாணசுந்தரனார்

தமிழ்நாடும் நம்மாழ்வாரும்திரு. வி. கலியாணசுந்தரனார் முன்னுரை தமிழ் நாடென்பது ஒரு தனி நாடு அந் நாட்டுக்கெனத் தனிமொழி, தனி வழக்க ஒழுக்கங்கள் முதலியன உண்டு. பிற நிலங்கள் நாடாதற்கு முன்னரே, தமிழ்நாடு தன் முயற்சியால் தனக்கெனச் சிறப்பாக இலக்கிய இலக்கணம், மருத்துவம், சோதிடம், வேதம் முதலியன வகுத்துக் கொண்டது. ஈண்டுத் தமிழ்நாட்டுக்கு வேதம்-மறை சிறப்பாக இருந்தது…

சைவத் திறவு – திரு. வி. கலியாணசுந்தரனார்

சைவத் திறவு திரு. வி. கலியாணசுந்தரனார் அணிந்துரை ஒன்றுகண் டீருல குக்கொரு தெய்வமும்ஒன்றுகண் டீருல குக்குயி ராவதுநன்றுகண் டீரினி நமசிவா யப்பழந் தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே -திருமூலர் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி – பகவன் முதற்றே உலகு என்றார் திருவள்ளுவனார். உலகம் ஒரு முழு முதலை யுடைத்து என்னும் உண்மையில் இஞ்ஞான்று ஐயங்கொள்ளும்…

பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை – திரு. வி. கலியாணசுந்தரனார்

பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை திரு. வி. கலியாணசுந்தரனார் முதற்பதிப்பின் முன்னுரை உலகம் பெண் ஆண் என்னும் இருபாலாலும் ஆக்கப் பட்டிருக்கிறது. இரண்டுஞ் சேர்ந்த ஒன்றே உலகம் என்பது. இரண்டும் ஒன்றி இயங்கினாலன்றி உலகம் நல்வழியில் நடைபெறாது. பெண் தாயாகலான், பெண்ணலன் பெரிதும் ஓம்பப் பெறல் வேண்டும். பெண்ணலன் ஓம்பப்படாத இடத்தில் வேறு எவ்வித நலனும்…

என் கடன் பணிசெய்துகிடப்பதே ! – திரு. வி. கலியாணசுந்தரனார்

என் கடன் பணிசெய்துகிடப்பதே ! திரு. வி. கலியாணசுந்தரனார் அறிவு விளக்கமும் அன்பு நிகழ்ச்சியும் மக்கள் வாழ்விற்கு இன்றியமையாதன. வினை இல்வழி அறிவும் விளக்கமுறாது; அன்பும் நிகழாது. அறிவு விளக்கத்துக்கும் அன்பு நிகழ்சசிக் கும் ஊற்றாயிருப்பது வினை. வினை, அறிவுக்கும் அன்புக்குங் கொழுகொம்பு போன்றது. ஆதலால், மக்கள் வினைவழி அறிவு பண்பட்டு அன்பு நிகழும். அறிவு…

சன்மார்க்க போதமும் திறவும் – திரு. வி. கலியாணசுந்தரனார்

சன்மார்க்க போதமும் திறவும் திரு. வி. கலியாணசுந்தரனார் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் உலகம் பலவிதம் என்பது பழமொழி. இப்பழமொழி உலகத்தின் புறத்தோற்றத்தை ஒட்டிப் பிறந்தது. தோன்றும் புறத்தின் பலவிதம், அகத்தின் ஒரு விதத்தினது பரிணாமம். பன்மை காரணமா? காரியமா? ஒருமை இன்றிப் பன்மை இன்மையான், பன்மை காரியம் என்பதை நிறுவிக் காட்டுதற்கு விரிவுரை வேண்டுவதில்லை.…

சமரச சன்மார்க்கத் திறவு – திரு. வி. கலியாணசுந்தரனார்

சமரச சன்மார்க்கத் திறவு திரு. வி. கலியாணசுந்தரனார் முன்னுரை ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ ‘சன்மார்க்க போதம்’ என்றொரு நூல் என்னால் இயற்றப்பட்டது. அந்நூலுடன் தொடர்பு கொண்டது இந்நூல். அது பொது நூல். இது சிறப்பு நூல். பொதுமையே சிலர் உள்ளத்தை நிறைவு செய்யும். சிலர் உள்ளத்தைப் பொதுமை நிறைவு செய்வதில்லை. இவருக்குச் சிறப்புந் தேவை.…

சைவத்தின் சமரசம் – திரு. வி. கலியாணசுந்தரனார்

சைவத்தின் சமரசம் திரு. வி. கலியாணசுந்தரனார் அணிந்துரை உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே – அப்பர் உலகம் பலவிதம் என்பது பழமொழி. இப்பொது மொழி அவரவர் உலகுக்கேற்ற பொருளை விளக்குவது. ஒவ்வொருவர்க்கு ஒவ்வோருலகுண்டு. எனக்கும் ஓருலகுண்டு. அவ்வுலகில் நின்று பலவிதத்தை இருவிதத்தில் அடக்க எண்ணுகிறேன். ஒருவிதம் வேறுபடுஞ் சமயமெலாம் புகுந்து பார்க்கின், விளங்குபரம் பொருளே நின்…

முருகன் அல்லது அழகு – திரு. வி. கலியாணசுந்தரனார்

முருகன் அல்லது அழகு திரு. வி. கலியாணசுந்தரனார் குமரகுருபரர் உலகு குளிர எமது மதியில் ஒழுகு மமுத கிரணமே                உருகு மடிய ரிதய நெகிழ உணர்வி லெழுந லுதயமேகலையு நிறைவு மறிவு முதிர முதிரு மதுர நறவமே                கழுவு துகளர் முழுக நெடிய கருணை பெருகு சலதியேஅலகில் புவன முடியும் வெளியில் அளியு மொளியி னிலயமே               …

தமிழ்நாட்டுச் செல்வம் -திரு. வி. கலியாணசுந்தரனார்

தமிழ்நாட்டுச் செல்வம் திரு. வி. கலியாணசுந்தரனார் தோற்றுவாய் உங்கள் சங்கத்தின் ஆறாம் ஆண்டு விழாவிற்கு என்னைத் தலைமை வகிக்குமாறு விரும்பி அழைத்ததற்குப் பெரிதும் நன்றியறிதலுடையேன். இரண்டாம் ஆண்டு விழாவிற்கு ஈண்டுப்போந்து தலைமை வகித்துப் பேசிய போது எனக்கிருந்த உடல் உரம் இப்பொழுது இல்லாமை குறித்து வருந்துகிறேன். எனது உடல் நிலைகருதி மறுத்து விடலாமா என்றும் எண்ணினேன்.…

நாயன்மார் திறம் – திரு. வி. கலியாணசுந்தரனார்

நாயன்மார் திறம் திரு. வி. கலியாணசுந்தரனார் “நாயன்மார்” என்னும் ஒரு சிறு கட்டுரை 1921- ஆம் வருட “சுதேசமித்திரன்” அநுபந்தத்துக்கென என்னால் எழுதப்பட்டது. அக்கட்டுரை முதன் முறை நூல் வடிவாகக் காரைச் சிவனடியார் திருக்கூட்டத்தார் விரும்பியவாறு 1922-ஆம் ஆண்டில்வெளியிடப்பட்டது. அப்பதிப்பில் பெரு மாறுதல் ஒன்றுஞ் செய்யப்படவில்லை. இரண்டாம் பதிப்பில் சிற்சில மாறுதல்கள் செய்யப்பட்டன; நூலுக்கு “நாயன்மார்…

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !