Tag திரு. வி. கலியாணசுந்தரனார்

முருகன் அல்லது அழகு – திரு. வி. கலியாணசுந்தரனார்

முருகன் அல்லது அழகு திரு. வி. கலியாணசுந்தரனார் குமரகுருபரர் உலகு குளிர எமது மதியில் ஒழுகு மமுத கிரணமே                உருகு மடிய ரிதய நெகிழ உணர்வி லெழுந லுதயமேகலையு நிறைவு மறிவு முதிர முதிரு மதுர நறவமே                கழுவு துகளர் முழுக நெடிய கருணை பெருகு சலதியேஅலகில் புவன முடியும் வெளியில் அளியு மொளியி னிலயமே               …

தமிழ்நாட்டுச் செல்வம் -திரு. வி. கலியாணசுந்தரனார்

தமிழ்நாட்டுச் செல்வம் திரு. வி. கலியாணசுந்தரனார் தோற்றுவாய் உங்கள் சங்கத்தின் ஆறாம் ஆண்டு விழாவிற்கு என்னைத் தலைமை வகிக்குமாறு விரும்பி அழைத்ததற்குப் பெரிதும் நன்றியறிதலுடையேன். இரண்டாம் ஆண்டு விழாவிற்கு ஈண்டுப்போந்து தலைமை வகித்துப் பேசிய போது எனக்கிருந்த உடல் உரம் இப்பொழுது இல்லாமை குறித்து வருந்துகிறேன். எனது உடல் நிலைகருதி மறுத்து விடலாமா என்றும் எண்ணினேன்.…

நாயன்மார் திறம் – திரு. வி. கலியாணசுந்தரனார்

நாயன்மார் திறம் திரு. வி. கலியாணசுந்தரனார் “நாயன்மார்” என்னும் ஒரு சிறு கட்டுரை 1921- ஆம் வருட “சுதேசமித்திரன்” அநுபந்தத்துக்கென என்னால் எழுதப்பட்டது. அக்கட்டுரை முதன் முறை நூல் வடிவாகக் காரைச் சிவனடியார் திருக்கூட்டத்தார் விரும்பியவாறு 1922-ஆம் ஆண்டில்வெளியிடப்பட்டது. அப்பதிப்பில் பெரு மாறுதல் ஒன்றுஞ் செய்யப்படவில்லை. இரண்டாம் பதிப்பில் சிற்சில மாறுதல்கள் செய்யப்பட்டன; நூலுக்கு “நாயன்மார்…

நினைப்பவர்‌ மனம்‌ – திரு. வி. கலியாணசுந்தரனார்

நினைப்பவர்‌ மனம்‌திரு. வி. கலியாணசுந்தரனார் “குறியே போற்றி குணமே போற்றிநெறியே போற்றி நினைவே போற்றி” – மாணிக்கவாசகர் சகோதரிகளே! சகோதரர்களே! நிலமடந்தையின் நெஞ்சத் தாமரையென்று போற்றப்பெறுத் திருச்சிற்றம்பலம் முதலிய திருப்பதிகளைத் தன்னகத்தேகொண்டு, காலம் விழையுங் குரவன்மார், அடிகண்மார்,அறவோர், துறவோர், நாவலர், பாவலர், முதலியோர் அவ்வப்போது தோன்றுதற்குரிய நிலைக்களன்களுள் ஒன்றாய்த் திகழ்ந்து,மன்பதைக்கு நலஞ்செய்து வரூஉந் தென்னார்க்காடு ஜில்லாவின்ஒரு…

ஆலமும் அமுதமும் – திரு. வி. கலியாணசுந்தரனார்

ஆலமும் அமுதமும் திரு. வி. கலியாணசுந்தரனார் அணிந்துரை ஒருவன் “உலக வாழ்க்கையே வேண்டாம்” என்று கடவுள்திருப்பெயரை மட்டும் ஓதியவண்ண மிருக்கிறான்; மற்றொருவன்கடவுள் நினைவேயின்றி உலக வாழ்க்கையில் அழுந்திக் கிடக்கிறான். இவ்விருவருள் எவன் கடவுளிடத்தில் அன்புடையவனாவன்? சமயங்களின் கொள்கைகள் பலதிறத்தன. அவைகளுள்இங்கே குறிக்கத் தக்கன இரண்டு. ஒன்று, விடுதலைக்கு இயற்கைவாழ்க்கையைத் துறத்தல் வேண்டுமென்பது; மற்றொன்று,விடுதலைக்கு இயற்கையோடியைந்து வாழ்தல்…

இன்பவாழ்வு – திரு. வி. கலியாணசுந்தரனார்

இன்பவாழ்வு திரு. வி. கலியாணசுந்தரனார் ‘இயற்கை வாழ்வே இன்ப வாழ்வு’ என்பது பழந் தமிழர் கொள்கை. அன்னார் இயற்கையோடு கலந்த இன்ப வாழ்வை நடத்தினவர் என்பதைப் பண்டைத் தமிழ் நூல்களில் இன்னுங் காணலாம். இடைக்காலத்தில் பழந்தமிழர் கொள்கை வீழ்த்தப்பட்டது. அன்று தொட்டு நாடு உரிமையுணர்விழந்து வறுமைக்கும் பிணிக்கும் இரையாகி நரகத்துன்பத்தில் வீழ்ந்து கிடக்கிறது. மீண்டுந் தமிழ்நாடு…

தமிழ் நூல்களில் பௌத்தம் -திரு. வி. கலியாணசுந்தரனார்

தமிழ் நூல்களில் பௌத்தம் திரு. வி. கலியாணசுந்தரனார் மனிதன் விலங்கினின்றுந் தோன்றினவன். அவனை விலங்கினின்றும் பிரிப்பது சமயம். விலங்கு+ சமயம் = மனிதன். எனவே மனிதனுக்குச் சமயம் இன்றி யமையாதது. அச்சமயம் ஒன்றா? பலவா? மெய்யறிவு விளங்கப் பெற்றவர்க்கும், அவ்வறிவுண்மையைக் கலையறிவால் உணர்ந்து, அதைக் குறிக்கொண்டு நிற்பவர்க்கும் சமயம் ஒன்றே. மெய்யறிவு விளக்கமாதல் நாட்டமாதல் பெறாதார்க்குச்…