Tag திரு. வி. கலியாணசுந்தரனார்

ஆலமும் அமுதமும் – திரு. வி. கலியாணசுந்தரனார்

ஆலமும் அமுதமும் திரு. வி. கலியாணசுந்தரனார் அணிந்துரை ஒருவன் “உலக வாழ்க்கையே வேண்டாம்” என்று கடவுள்திருப்பெயரை மட்டும் ஓதியவண்ண மிருக்கிறான்; மற்றொருவன்கடவுள் நினைவேயின்றி உலக வாழ்க்கையில் அழுந்திக் கிடக்கிறான். இவ்விருவருள் எவன் கடவுளிடத்தில் அன்புடையவனாவன்? சமயங்களின் கொள்கைகள் பலதிறத்தன. அவைகளுள்இங்கே குறிக்கத் தக்கன இரண்டு. ஒன்று, விடுதலைக்கு இயற்கைவாழ்க்கையைத் துறத்தல் வேண்டுமென்பது; மற்றொன்று,விடுதலைக்கு இயற்கையோடியைந்து வாழ்தல்…

இன்பவாழ்வு – திரு. வி. கலியாணசுந்தரனார்

இன்பவாழ்வு திரு. வி. கலியாணசுந்தரனார் ‘இயற்கை வாழ்வே இன்ப வாழ்வு’ என்பது பழந் தமிழர் கொள்கை. அன்னார் இயற்கையோடு கலந்த இன்ப வாழ்வை நடத்தினவர் என்பதைப் பண்டைத் தமிழ் நூல்களில் இன்னுங் காணலாம். இடைக்காலத்தில் பழந்தமிழர் கொள்கை வீழ்த்தப்பட்டது. அன்று தொட்டு நாடு உரிமையுணர்விழந்து வறுமைக்கும் பிணிக்கும் இரையாகி நரகத்துன்பத்தில் வீழ்ந்து கிடக்கிறது. மீண்டுந் தமிழ்நாடு…

தமிழ் நூல்களில் பௌத்தம் -திரு. வி. கலியாணசுந்தரனார்

தமிழ் நூல்களில் பௌத்தம் திரு. வி. கலியாணசுந்தரனார் மனிதன் விலங்கினின்றுந் தோன்றினவன். அவனை விலங்கினின்றும் பிரிப்பது சமயம். விலங்கு+ சமயம் = மனிதன். எனவே மனிதனுக்குச் சமயம் இன்றி யமையாதது. அச்சமயம் ஒன்றா? பலவா? மெய்யறிவு விளங்கப் பெற்றவர்க்கும், அவ்வறிவுண்மையைக் கலையறிவால் உணர்ந்து, அதைக் குறிக்கொண்டு நிற்பவர்க்கும் சமயம் ஒன்றே. மெய்யறிவு விளக்கமாதல் நாட்டமாதல் பெறாதார்க்குச்…