Tag புதினங்கள்

தஞ்சை வீழ்ச்சி – கா. ந. அண்ணாதுரை

தஞ்சை வீழ்ச்சி கா. ந. அண்ணாதுரை பகுதி: 1 சிங்கம் இரை கிடைக்காது திகைத்தாலும், சிறு நரிக்கு எங்கேனும் ஏதேனும் இரை கிடைத்துவிடும் என்பர்! வீரர்கள் வாழ்வு இழந்து, தாழ்வு தீண்டிடும் வேதனை நிலை பெறுவதுண்டு – வஞ்சகர்களோ எப்படியோ, எதைச் செய்தோ, வாழ வழி அமைத்துக் கொள்வர். இந்தச் சோகச் சுமையை, தமிழக வரலாற்றுச்…

பாண்டவர் கதை – பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி

பாண்டவர் கதைபிரான்ஸிஸ் கிங்ஸ்பரி இந்நூல் சிறுவர் சிறுமியர்பொருட்டு எழுதியது. மகாபாரதம் வடமொழியிற் பதினெட்டுப் பருவமுடையது. தமிழிற் பெருந்தேவனார் கி. பி. தொள்வது நூற்றாண்டிற் பாரதவெண்பா இயற்றினார். அதிற் சிறிது பாகமே நம் கைக்கெட்டியது ; எஞ்சியவெல்லாம் அழிந்தொழிந்தன. அதன்பின் கி.பி. பதினைவது நூற்றாண்டில் வில்லிபுத்தூரர் விருத்தப்பாவால் மகாபாரதம் வகுத்தனர். இவர், பதினெட்டுப் பருவத்தில் முதற்பத்தையே கொண்டார்…

குமரிக்கோட்டம் – கா. ந. அண்ணாதுரை

குமரிக்கோட்டம் கா. ந. அண்ணாதுரை காலம் மாறுகிறது என்பதை அறிய மறுக்கும் வைதீகர்களில் சிலருக்குத் தமது சொந்த வாழ்க்கை யிலேயே, நேரிடும் சிலபல சம்பவங்கள், மனமாற்றத்தை ஆச்சரியகரமான விதத்திலும் வேகத்துடனும் தந்து விடுகின்றன. ‘குமரிக்கோட்டம் ‘ இக் கருத்தை விளக்கும் ஓர் கற்பனை ஓவியம். இதிலே காணப்படும் சீறும் தந்தை, வாதிடும் மகன், வசீகர மங்கை,…

கண்ணகி தேவி – ஆ. கார்மேகக் கோனார்

கண்ணகி தேவி ஆ. கார்மேகக் கோனார் வீரபத்தினியாகிய கண்ணகி தேவியின் வரலாறு, தமிழ் மொழியிலுள்ள ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாய்ச் சிறந்து விளங்கும் சிலப்பதிகாரத்துள் விரித்துக் கூறப் பெறுவது. இஃது ஆயிரத்தெண்ணூறு வருடங்களுக்கு முன் காவிரிப்பூம் பட்டினம், மதுரை, வஞ்சி என்னும் சோழ, பாண்டிய, சேர நாட்டுத் தலைநகரங்கள் மூன்றின் சம்பந்தமும் பெற்ற உண்மைச் சரித்திரமாகும். இச்சரிதம் கடந்த…

அன்னக்கிளி – வல்லிக்கண்ணன்

அன்னக்கிளிவல்லிக்கண்ணன் சில வார்த்தைகள் ‘ராஜா ராணி கதை’களுக்கு மக்களிடம் என்றுமே அதிகமான செல்வாக்கு உண்டு. குழந்தைப் பிராயத்தில் பாட்டி, தாத்தா, அம்மா, மற்றும் சுவையாகக் கதை சொல்லத் தெரிந்தவர்கள் வாய் மூலம் இத்தகைய கதைகளைக் கேட்டுக் கேட்டு உள்ளுற வளர்ந்து வருகிற ஒரு விருப்பம், பெரியவர்களான பிறகு சரித்திரக் கதைகளிடம் விசேஷமான மோகமாகப் பரிணமித்து விடுகிறது…

வண்டிக்காரன் மகன் – கா. ந. அண்ணாதுரை

வண்டிக்காரன் மகன்கா. ந. அண்ணாதுரை பகுதி: 1 ஆப்பக்கடை அன்னம்மாளிடம் அச்சம் கொள்ளாதவர்கள் அவலூரில் யாரும் இருக்கமுடியாது. அவ்வளவு துணிச்சல். யாரையும் ஒரு பொருட்டாக மதிக்காத சுபாவம். அப்படிப்பட்ட அன்னம்மாள் சோகமுற்று இருப்பது என்றால், ஏதோ பெரிய விபரீதம் நேரிட்டுவிட்டது என்றுதானே பொருள். விபரீதம்தான் நேரிட்டுவிட்டது. தன் மகள் காவேரியின் ஜாதகத்தைக் கேட்க அருணகிரி வருவான்…

பவழ பஸ்பம் – கா. ந. அண்ணாதுரை

பவழ பஸ்பம் கா. ந. அண்ணாதுரை பகுதி: 1 “சகலாவல்லியே! நீ சாய்ந்திருக்கும் சர்ப்பாசனம் சந்திரசேகர பூபதிக்குச் சந்தனக் கட்டை விற்றதிலே கிடைத்த இலாபத்தால் வாங்கியதுதான். மாலையில் நீ மினுக்கிக்கொண்டு நிற்கிறாயே, பளிங்கு அறையிலே, நிலக்கண்ணாடி, அது, எது தெரியுமா? ஏவலப்பனுக்கு என்னாலே பெருங்கஷடம் வந்தது என்று எவனெவனோ பேசினானே, அந்தச் சமயத்தில், அவனுடைய சஞ்சலத்தைப்…

உமாவின் பூனைக்குட்டி – குழந்தைக் கவிஞர்அழ. வள்ளியப்பா

உமாவின் பூனைக்குட்டி – குழந்தைக் கவிஞர்அழ. வள்ளியப்பா உமா ஒரு பூனைக்குட்டி வளர்த்து வந்தாள். கீதா என்று அதற்குப் பெயர். கீதா மிகவும் நல்ல பூனைக்குட்டி. திருட்டுத்தனமாக அது பாலைக் குடிக்காது; எங்கேனும் நல்ல காரியமாய்ப் போகும் போது குறுக்கே போகாது; நடு இரவிலே, ‘மியாவ், மியாவ்’ என்று கத்தித் தூக்கத்தைக் கெடுக்காது. இப்படிப்பட்ட பூனைக்குட்டியின்…