freetamilbooks.com

freetamilbooks.com

அசோகர் கதைகள் – நாரா. நாச்சியப்பன்

அசோகர் கதைகள் நாரா. நாச்சியப்பன் மாமன்னர் அசோகர் இந்திய வரலாற்றில் பெற்றுள்ள இடம் பெரியது. நாடுகள் பலவற்றைக் கட்டியாண்ட பெரு மன்னர் என்பதோடு, கலிங்கப் போரிலே அவர் கொண்ட பெருத்த மனமாற்றமும் கூடி அவருக்குப் பெருஞ்சிறப்பை யளித்தது. ⁠மாமன்னர் அசோகர் மனமாற்றம் கொண்ட பிறகுங் கூட அவருடைய பேரரசு எவ்விதக் குறையும் குறைவும் அற்று விளங்கியது…

ஆறு செல்வங்கள் – கி. ஆ. பெ. விசுவநாதம்

ஆறு செல்வங்கள் கி. ஆ. பெ. விசுவநாதம் மலர்கள் பலவகை, அவற்றுட் சில, அழகுமட்டும் கொண்டு, காண்பார் கண்களைக் கவரும்; சில குறைந்த அழகும் நிறைந்த மணமும் உடையவாய்க் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கும். அழகும் சுவையும் மணமும் ஆய்வதில் அருந்திறன் வாய்ந்தவை தேனீக்கள். அவை, “இணரூழ்த்தும் நாறா மலர்” களை நாடாது, கண்ணைக் கவர்ந்து சுவையும்…

ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன் – ஆ. கார்மேகக் கோனார்

ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன் ஆ. கார்மேகக் கோனார் நூன்முகம் ஆபுத்திரன் சரித்திரம், தமிழ் மொழியிலுள்ள ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாகிய மணிமேகலைக் காப்பியத்துள் ஆங்காங்கு இடையிடையே வரும் ஒர் கிளைக்கதை. இதனை ஒர் கோவைப்படத் தொகுத்துப் புதிய உரைநடையில் இளைஞர் கதைப்பூந்துணர் மலர் 1 ஆக வெளியிடுகின்றேன். இச்சரித்திரத்துள் காவிய ரசம் பற்றியும், வேறு நன்மை பற்றியும்…

தாவிப் பாயும் தங்கக் குதிரை – நாரா. நாச்சியப்பன்

தாவிப் பாயும் தங்கக் குதிரை நாரா. நாச்சியப்பன் பொதுவாகவே தேவதைக் கதைகளும் மாய மந்திரக் கதைகளும் சிறுவர் உள்ளத்தைக்கவர்ந்து விடுகின்றன. சிறுவர்களின் இந்த மனவியல்பைக் கண்டுதான் பல சான்றோர்கள், சிறுவர்களுக்கு எதையும் சொல்ல வேண்டுமானால், தேவதைக் கதைகளின் மூலம் சொல்லுவது சிறந்தது என்று இந்த முறையைப் பின்பற்றினார்கள். ‘தாவிப் பாயும் தங்கக் குதிரை’ என்ற இக்…

தாயார் கொடுத்த தனம் – வெ. இராமலிங்கம்பிள்ளை

தாயார் கொடுத்த தனம் வெ. இராமலிங்கம்பிள்ளை எங்கள் பதிப்பகத்தின் வெளியீடாக நாமக்கல் கவிஞரின் கட்டுரைத் தொகுப்பை ‘தாயார் கொடுத்த தனம்’ என்ற தலைப்புடன் பெருமகிழ்ச்சியோடு வெளியிடுகிறோம். இக்கட்டுரைகள் எல்லாம் கவிஞரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளோடு சம்பந்தப்பட்டவை. ஒவ்வொன்றும் தமிழாராய்ச்சியும், இலக்கிய ரஸனையும் உடையதாய் அமைந்துள்ளது. வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கதைகளை விட ருசிகரமாக எழுதும் திறமை கவிஞரின் தனிச்…

திருக்குறளில் செயல்திறன் – கி. ஆ. பெ. விசுவநாதம்

திருக்குறளில் செயல்திறன் கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறள், தொட்டனைத்து ஊறிச் சுரக்கும் அறிவுக் கேணி. திருக்குறளின் பொருள் வளமையும் சிறப்பும் கற்கக் கற்கப் பெருகிக் கொண்டே இருக்கும். முத்தமிழ்க் காவலர் அவர்கள் திருக்குறளைத் தொட்டு நயங்காட்டும்போது, புதுப்புதுச் சுவையும், அழகும், செழுமையும் ஒளி வீசுகின்றன. அவை நம்மையும் திருக்குறள் சிந்தனையாளராக உயர்த்துகின்றன. செயல் திறனே…

வள்ளுவர் உள்ளம் – கி. ஆ. பெ. விசுவநாதம்

வள்ளுவர் உள்ளம் கி. ஆ. பெ. விசுவநாதம் திருக்குறள் பீடம் : குருகுலம் அழகரடிகள்குருகுலம், 21-6-64. திருவாளர் கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள், பேச்சாலும் எழுத்தாலும் இனிய சொல்லோவியர்; தொடுதமிழ் நூலெல்லாம் அவர்க்குச் சுரந்தமிழ்து பாயும். திருக்குறள், தமிழ்மறை; அதோடு, உலகுக் கெல்லாம் பொதுமறை! இயல்பாகவே அது, சுரந்த பா; தாய் நாடிய தமிழ்க்கன்று…

வாழ்க்கை இன்பம் – கா. சுப்பிரமணியப் பிள்ளை

வாழ்க்கை இன்பம் கா. சுப்பிரமணியப் பிள்ளை அறிவுச்சுடர்’ என்னும் மகுடம் புனைந்து வெளி வரும் இந்நூல் வரிசை அறிவும் அனுபவமும் வாய்ந்த நல்லறிஞரால் எழுதப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளைக்கொண்டு திகழ்வதாகும். மலர் தொறுஞ் சார்ந்து துளித்துளியாகத் தேனைச் சேகரித்துப் பிறர்க்குதவும் பெற்றிவாய்ந்த தேனீக்களைப் போலப் பன்னூற் பயிற்சியாலும் வாழ்க்கை அனுபவத்தாலும் அரிதின் முயன்று சேகரித்த அருங்கருத்துகளை அனைவருங்…

வேலின் வெற்றி – ரா. பி. சேதுப்பிள்ளை

வேலின் வெற்றி ரா. பி. சேதுப்பிள்ளை (கந்தபுராணத்தைத் தழுவி எழுதிய நூல்) தமிழ்நாடு என்றும் முருகனை வழிபடும் தகைமை சான்றது. கோலமாமயில்மீது குலவும் குழகன் என்றும், வேற்படையுடைய விமலன் என்றும், அரந்தை கெடுத்து வரந்தரும் இறைவன் என்றும் அப்பெருமானைப் போற்றுவர், தமிழ் மக்கள். அல்லல் விளைத்த அசுரர் குலத்தை வேரறுத்த, அறத்தினை நிலை நிறுத்திய முருகன்…

ஆலமும் அமுதமும் – திரு. வி. கலியாணசுந்தரனார்

ஆலமும் அமுதமும் திரு. வி. கலியாணசுந்தரனார் அணிந்துரை ஒருவன் “உலக வாழ்க்கையே வேண்டாம்” என்று கடவுள்திருப்பெயரை மட்டும் ஓதியவண்ண மிருக்கிறான்; மற்றொருவன்கடவுள் நினைவேயின்றி உலக வாழ்க்கையில் அழுந்திக் கிடக்கிறான். இவ்விருவருள் எவன் கடவுளிடத்தில் அன்புடையவனாவன்? சமயங்களின் கொள்கைகள் பலதிறத்தன. அவைகளுள்இங்கே குறிக்கத் தக்கன இரண்டு. ஒன்று, விடுதலைக்கு இயற்கைவாழ்க்கையைத் துறத்தல் வேண்டுமென்பது; மற்றொன்று,விடுதலைக்கு இயற்கையோடியைந்து வாழ்தல்…