Tag கட்டுரைகள்

சங்க கால வள்ளல்கள் – பாலூர் கண்ணப்ப முதலியார்

சங்க கால வள்ளல்கள் பாலூர் கண்ணப்ப முதலியார் முன்னுரை ‘சங்க கால வள்ளல்கள்’ என்னும் பெயருடன் வெளிவரும் இந்நூல், கடையெழு வள்ளல்களின் வரலாற்றை முறைப்படி அறிவிக்கும் ஒரு நூலாகும். இது பெரிதும் புறநானூற்று நூலையே அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருத்தலின், இன்னோரன்ன வரலாறுகள் பலவற்றை அந்நூலினின்று மாணவர்கள் படித்தற்குத் துணைசெய்ய ஒரு தூண்டுகோலாக இருக்கும் என்னும் எண்ணங்கொண்டே…

உணவு நூல் – மயிலை சீனி. வேங்கடசாமி

உணவு நூல் மயிலை சீனி. வேங்கடசாமி முகவுரை மனிதருக்குப் பலப்பல காரணங்களினாலே பலப்பல நோய்கள் உண்டாகின்றன. நோய்களைத் தீர்க்க சிகிச்சைகளும், மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நோய் வந்தபிறகு மருந்து கொடுத்து நோயைத் தீர்ப்பதைவிட நோயை வராமலே தடுப்பது மிக நல்லது. சரியான உணவைத் தகுந்த முறைப்படி உட்கொள்ளத காரணத்தினாலே நோய்கள் உண்டாகின்றன. தகுந்த உணவை தகுந்த முறைப்படி…

நாற்பெரு வள்ளல்கள் – மா. இராசமாணிக்கனார்

நாற்பெரு வள்ளல்கள் மா. இராசமாணிக்கனார் ஆக்கியோன் அறிவிப்பு இந்நூல் தந்நலங் கருதாத் தனிப்பெரு வள்ளல்களாய்த் தமிழ் நாட்டிற் பெருமையுற்று விளங்கிய பாரி, ஆய், அதியன், குமணன் என்போரது வரலாற்றைக் கூறுவது. இது புறநானூற்றைப் பெரும்பான்மை தழுவியும், அகநானூறு நற்றிணை முதலிய பிற இலக்கியங்களைச் சிறுபான்மை தழுவியும் ஆராய்ந்து எழுதப் பெற்றதாகும். இதில், பண்டைத் தமிழ் வேந்தர்,…

இமயமும் குமரியும் – கி. வா. ஜகந்நாதன்

இமயமும் குமரியும் கி. வா. ஜகந்நாதன் முகவுரை தமிழ் இலக்கியங்களிலே புகுந்து இன்பம் நுகரும் போது எத்தனையோ கருத்துக்கள் தோன்றுகின்றன. ஒரே புலவர் பல இடங்களில் சொல்லியிருக்கும் செய்திகளை ஒப்பு நோக்குவதில் ஒருவகைச் சுவை உண்டாகிறது. ஒரே கருத்தைப் பல புலவர்கள் வெவ்வேறு நூல்களிற் சொல்லியிருப்பதைக் கவனிக்கும் போது ஒருவகை இன்பம் எழுகிறது. சிலசில சமயங்களில்…

பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை – திரு. வி. கலியாணசுந்தரனார்

பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை திரு. வி. கலியாணசுந்தரனார் முதற்பதிப்பின் முன்னுரை உலகம் பெண் ஆண் என்னும் இருபாலாலும் ஆக்கப் பட்டிருக்கிறது. இரண்டுஞ் சேர்ந்த ஒன்றே உலகம் என்பது. இரண்டும் ஒன்றி இயங்கினாலன்றி உலகம் நல்வழியில் நடைபெறாது. பெண் தாயாகலான், பெண்ணலன் பெரிதும் ஓம்பப் பெறல் வேண்டும். பெண்ணலன் ஓம்பப்படாத இடத்தில் வேறு எவ்வித நலனும்…

சிலம்பில் ஈடுபட்டதெப்படி – ம. பொ. சிவஞானம்

சிலம்பில் ஈடுபட்டதெப்படி ம. பொ. சிவஞானம் “சிலம்பில் ஈடுபட்ட தெப்படி?” என்ற வினாவை எழுப்பும் தலைப்புக்கு, ஒரே விடை என் மனைவி எம். எஸ். ராஜேஸ்வரியின் பொன்மொழிதான் என்பது என் பதிலாகும். நான் ஆகஸ்ட் கிளர்ச்சியின்போது மத்திய மாகாணத்திலுள்ள அமராவதி சிறையில் சரியாக ஓராண்டு காலம் அடைபட்டிருந்த போது, என் உடம்பு கரைந்து கரைந்து- எலும்பு…

உணவு நூல் – மயிலை சீனி. வேங்கடசாமி

உணவு நூல் மயிலை சீனி. வேங்கடசாமி மனிதருக்குப் பலப்பல காரணங்களினாலே பலப்பல நோய்கள் உண்டாகின்றன. நோய்களைத் தீர்க்க சிகிச்சைகளும், மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நோய் வந்தபிறகு மருந்து கொடுத்து நோயைத் தீர்ப்பதைவிட நோயை வராமலே தடுப்பது மிக நல்லது. சரியான உணவைத் தகுந்த முறைப்படி உட்கொள்ளத காரணத்தினாலே நோய்கள் உண்டாகின்றன. தகுந்த உணவை தகுந்த முறைப்படி சமைத்து…

கடவுளும் பிரபஞ்சமும் – ம. சிங்காரவேலு

கடவுளும் பிரபஞ்சமும் ம. சிங்காரவேலு நூன்முகம் சென்ற வருடம் நமது தோழர் ஈ. வெ. இராமசாமி அவர்கள், ” குடி அரசு” க்கு மத சம்பந்தமாக செய்துள்ள விஞ்ஞான ஆராய்ச்சிகளின் முடிவினை சில வியாசமாக எழுதக் கேட்டுக்கொண்டனர். நமது அசௌக்கியத்தினிமித்தம், அவர் வேண்டுகோளுக் கிணங்க முடியாமற் போயிற்று. சென்ற இரண்டொரு வருஷங்களில் பிரபஞ்சத்தைப்பற்றிச் சில நவீன…

கண்ணகி வரலாறும், கற்புமாண்பும் – ந. மு. வேங்கடசாமி நாட்டார்

கண்ணகி வரலாறும், கற்புமாண்பும் ந. மு. வேங்கடசாமி நாட்டார் ‘செந்தமிழ்ச்செல்வி’ ௩, ச-ம் சிலம்புகளில் ‘கண்ணகி கற்பு மாண்பு’ என்னும் பெயருடன் வெளிப் போந்த கட்டுரையைப் பிற்பகுதியாகவும், புதுவதாக எழுதிய கண்ணகி வரலாற்றை முற்பகுதியாகவும் கொண்டுள்ளது இவ்வுரை நூல். கண்ணகி வரலாறு என்பது சிலப்பதிகாரத்தின் கதைச்சுருக்கமே. இஃது இயற்கை வருணனைப் பகுதிகளிலும், துதி முதலியவற்றிலுமிருந்து எடுத்த,…

நாடகத் தமிழ் – பம்மல் சம்பந்த முதலியார்

நாடகத் தமிழ் பம்மல் சம்பந்த முதலியார் முதல் அத்தியாயம் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், என நமது தாய் பாஷையாகிய தமிழானது, மூவகையாய் நமது முன்னோரால் பிரிக்கப்பட்டது யாவரும் அறிந்த விஷயமே. ஆயினும் சற்றேறக் குறைய நாற்பது வருடங்களுக்கு முன், நாடகத்தமிழ் என்று ஒரு பிரிவு இருந்ததோ என்றே சந்தேகிக்கும்படியான கூணதிசைக்கு நமது தாய் மொழியாகிய தமிழ்மொழி…

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !