

பதஞ்சலி யோக ஸூத்ரம்
சி. சுப்பிரமணிய பாரதி
முகவுரை
பதஞ்சலி யோக ஸூத்ரங்களின் முதற் பாகம் ஸமாதி பாதம்; அது 51 ஸூத்ரங்கள் கொண்டது; அவற்றுள் 50 ஸூத்ரங்களுக்கு மட்டுமே பாரதியாரின் மொழிபெயர்ப்பும் வ்யாக்யானமும் உள்ளன. பாரதியாரின் வ்யாக்யானம் முன்புள்ள பழைய உரைகளையும், ஸ்வாமி விவேகானந்தர் எழுதிய ஆங்கில உரையையும், மதுரை நாராயணய்யர் எழுதிய ஆங்கில உரையையும் எடுத்துக் காட்டுகின்றது; ஆயினும், ஸூத்ரங்களுக்குப் பாரதியார் கொண்ட கருத்துக்களையும் நன்கு விளக்குவதால் இந்த வ்யாக்யானம் தனிச் சிறப்பு வாய்ந்ததாகின்றது.
பாரதி பிரசுராலயத்தார்



