

வேத ரிஷிகளின் கவிதை
சி. சுப்பிரமணிய பாரதி
முன்னுரை
பாரதியார் பத்திரிகை வாயிலாக எழுதிய வியாஸங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. வேதரிஷிகளின் கவிதையை விளக்குவனவான சில ஸூக்தங்களை மொழி பெயர்த்து அவற்றிற்கு முன்னுரைகளும் விளக்கங்களும் எழுதியுள்ளார். வேத ஸூக்தங்களின் உள்ளுறை பொருளாக ஸ்ரீ பாரதியார் கொண்ட கருத்துக்களை இவை நன்கு விளக்குவன. வேத ஞானத்திலே இவருக்கு இருந்த பெருமதிப்பின் காரணமாக, இவர் ஆங்கிலத்தில் எழுதிய பாடல்களை ‘அக்னியும் இதர பாடல்களும்’ (Agni and other Poems) என்ற தலைப்புடைய தனி நூலாகப் பதிப்பித்திருக்கிறோம். அந் நூலினையும் இதனையும் படிப்போர்க்கு ஸ்ரீ பாரதியாரின் பாடல்கள் எவ்வளவிலே வேத ரிஷிகளின் கவிதையை அனுசரித்து எழுந்தன என்பது தெளிவாகும்.
பாரதி பிரசுராலயத்தார்.



