Tag ஆன்மீகம்

ஆனந்தத் தேன் – கி. வா. ஜகந்நாதன்

ஆனந்தத் தேன் கி. வா. ஜகந்நாதன் முகவுரை தமிழ்நாட்டில் கடவுளை நினைப்பதற்கு வாய்ப்பாகப் பல அமைப்புக்களும், பொருள்களும் வழக்கங்களும் இருக்கின்றன. கோயில்கள், புராணங்கள், நூல்கள் ஆகியவை கடவுளின் நினைவை எப்போதும் பசுமையாக இருக்கும்படி செய்கின்றன. மக்களுக்கு இடும் பெயர்களும், பண்டிகைகளும் நினைவுக்கு உரமூட்டுகின்றன. கடவுள் ஒருவனே என்ற அடிப்படையான உண்மையை நாம் மறப்பதில்லை. ஆனாலும் அன்பர்களின்…

சமய இலக்கியங்கள் – குன்றக்குடி அடிகளார்

சமய இலக்கியங்கள் குன்றக்குடி அடிகளார் பதிப்புரை தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள், இருபதாம் நூற்றாண்டில் தமிழினத்திற்குக் கிடைத்த அப்பரடிகள். அவர் தம் சிந்தனையும் செயலும், எழுத்தும் சொல்லும் மனித குலத்தின் வாழ்வையும் வளத்தையும் மேம்பாட்டையுமே மையமாகக் கொண்டு விளங்குவன. இன்று தமிழ்கூர் நல்லுலகெங்கணும், தமிழறிந்தோர் வாழும் இடமெல்லாம் அரசியல் மேடையாக இருந்தாலும், அருளியல் மேடையாக இருந்தாலும்,…

அருட்பெருமான் – சுத்தானந்த பாரதியார்

அருட்பெருமான் சுத்தானந்த பாரதியார் [அருட்ஜோதி இராமலிங்க வள்ளலார் வரலாறு] 1. அருட் குழந்தை சிதம்பரம் நடராஜா சந்நிதி; உள்ளம் சிலிர்க்கும் காட்சி; சுத்த நடம்புரிகின்ற சித்த சிகாமணியின் தூக்கிய திருவடியும், அபயக்கரமும், புன்னகையமுதும், அருட்பார்வையும், கருணை முகமும் அன்பருக்குப் பேரின்பமளிக்கின்றன. அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், சேக்கிழார், பட்டினத்தார், தாயுமானார் முதலிய அடியார் பாடிப்பரவிய…

மாணிக்கவாசகர் மாட்சி – மறைமலை அடிகள்

மாணிக்கவாசகர் மாட்சி மறைமலை அடிகள் இது, பல்லாவரம் பொதுநிலைக் கழக ஆசிரியர் மறைமலையடிகள் இயற்றிய “மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்” என்னும் ஆராய்ச்சிப் பெருநூலின் முகவுரையினின்றும் எடுக்கப்பட்டது வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தைநான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலேதேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்ஊன்கலந்து வுயிர்கலந்து வுவட்டாமல் இனிப்பதுவே. வருமொழிசெய் மாணிக்க வாசகநின் வாசகத்தில்ஒருமொழியே என்னையுமென் உடையனையும்ஒன்றுவித்துத் தருமொழியா மென்னில்இனிச்…

மணிவாசகப்பெருமான் வரலாறு – கா. சுப்பிரமணிய பிள்ளை

மணிவாசகப்பெருமான் வரலாறு கா. சுப்பிரமணிய பிள்ளை பாண்டிவள நாட்டிலுள்ள திருவாதவூரிலே ஆதி சைவமரபிற் றோன்றியவரும், திருப்பெருந்துறையில் சிவபெருமான் மக்களுருவில் வந்து ஆட்கொண்டருளப் பெற்றவரும், சைவசமயாசாரியர்களுள் காலத்தால் முற் பட்டு விளங்கியவரும், தமிழ் நாட்டின்கண் உரமுற்றுச் சைவவான்பயிர்க்குக் கேடு விளைத்த புத்த மதத்தைக் களைந்தவரும், ஊமைப் பெண்ணைப் பேசுவித்த பெருமை பெற்றவரும், இறைவனே தம் பொருட்டு நரியைப்…

சிவபிரான்‌ கருணையுஞ்‌ சீவர்கள்‌ கடமையும்‌ – மு. கதிரேசச் செட்டியார்

சிவபிரான்‌ கருணையுஞ்‌ சீவர்கள்‌ கடமையும்‌ மு. கதிரேசச் செட்டியார் உசிவமயம்திருச்சிற்றம்பலம் (இது, பூவாளூர்ச் சைவ சித்தாந்த சங்கத்தின் ஜந்தாம் வருட நிறைவுக் கொண்டாட்ட காலமாகிய 7 – 3 – 15 – ல் சென்னைப் பிரஸிடென்ஸிக் காலேஜ் தமிழ்ப்பண்டிதர் மஹாமஹோபாத்தியாய ப்ருஹ்மஸ்ரீ வே. சாமிநாதையரவர் கள் அக்கிராசனத்திற் கூடிய வித்துவான்களும் பிரபுக்களும் நிறைந்த மஹா…

சைவ சமய சாரம்‌ – திரு.வி. கலியாணசுந்தரனார்

சைவ சமய சாரம்‌ திரு.வி. கலியாணசுந்தரனார் திருச்சிற்றம்பலம்‌ மெய்ம்மையாம்‌ உழவைச்‌ செய்துவிருப்பெனும்‌ வித்தை வித்திப்‌பொய்ம்மையாங்‌ களையை வாங்கிப்பொறையெனு நீரைப்‌ பாய்ச்சித்‌தம்மையு நோக்கிக்‌ கண்டுதகவெனும்‌ வேலி யிட்டுச்‌செம்மையுள்‌ நிற்ப ராகிற்‌சிவகதி விளைய மன்றே. -அப்பர்‌ காலம்‌ உலகத்திலே பல சமயங்கள்‌ நிலவுகின்றன. அவைகளுள்‌ பெரும்பாலன கால தத்துவத்துக்குக்‌ கட்டுப்பட்டுக்‌ கிடக்கின்றன. கிறிஸ்துவ சமயம்‌, பெளத்த சமயம்‌ முதலிய…

சைவ சித்தாந்த வரலாறு – கா. சுப்பிரமணியபிள்ளை

சைவ சித்தாந்த வரலாறு கா. சுப்பிரமணியபிள்ளை திருச்சிற்றம்பலம்சைவ சித்தாந்த வரலாறு(சிவநெறி வரலாறு) சைவம் சித்தாந்தம் என்ற இரு சொற்களின் பொருளை முதற்கண் ஆராய்ந்து கொண்டு பின் அவ் விரண்டினாலுமாகிய தொடர்மொழிப் பொருளின் வர லாற்றை ஆராய்வாம். சைவம் என்றது சிவம் என்னுஞ் செந்தமிழ்ச் சொல்லடியாய்ப் பிறந்து சிவனொடு தொடர் புடைமை என்னும் பொருளில் வழங்குவது. சிவனைப்…

சைவசித்தாந்த விளக்கச் சுருக்கம் – கா. சுப்பிரமணியபிள்ளை

சிவமயம்திருச்சிற்றம்பலம்சைவசித்தாந்த விளக்கச் சுருக்கம் தோற்றுவாய் உலகத்திலுள்ள பொருள்கள்க. அறிவுள்ளனஉ. அறிவில்லாதன என இருவகைப்படும் –அறிவுள்ளன இயக்குவன.அறிவில்லா தன இயங்குவன. இவ்விரண்டையும் சித்து என்றும், சடம் என்றும் முறையே கூறுப. அறிவுள்ளன யாவும் தாமே பொருள்களை அறிவன வல்ல. தாமே யாவற்றையும் அறியும் கடவுள் ஒருவர் அறிவிக்க, அவை அறியும். அக் கடவுளே சிவபெருமான்.க. அறிவுள்ளன உயிர்கள்.உ.…

நாயன்மார் திறம் – திரு. வி. கலியாணசுந்தரனார்

நாயன்மார் திறம் திரு. வி. கலியாணசுந்தரனார் “நாயன்மார்” என்னும் ஒரு சிறு கட்டுரை 1921- ஆம் வருட “சுதேசமித்திரன்” அநுபந்தத்துக்கென என்னால் எழுதப்பட்டது. அக்கட்டுரை முதன் முறை நூல் வடிவாகக் காரைச் சிவனடியார் திருக்கூட்டத்தார் விரும்பியவாறு 1922-ஆம் ஆண்டில்வெளியிடப்பட்டது. அப்பதிப்பில் பெரு மாறுதல் ஒன்றுஞ் செய்யப்படவில்லை. இரண்டாம் பதிப்பில் சிற்சில மாறுதல்கள் செய்யப்பட்டன; நூலுக்கு “நாயன்மார்…