Tag ஆன்மீகம்

நாயகப் பெருமான் – நாரா. நாச்சியப்பன்

நாயகப் பெருமான் நாரா. நாச்சியப்பன் அல்லாஹ் இறைவன். அவன் அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். எல்லாம் வல்லவன். எங்கும் நிறைந்தவன். அவனால் அருளப் பெற்றது திருக்குர்ஆன் வேதம். அவனை வழிபட்டு வாழும் மார்க்கம் இஸ்லாம். அவனுடைய திருத்தூதர் நபிகள் நாயகம். அவர்களின் திருப்பெயர் முகம்மது நபி. நாயகப் பெருமான் அவர்களால் உலகெங்கும் உண்மை யான இறைநெறி…

இறைவர் திருமகன் – நாரா. நாச்சியப்பன்

இறைவர் திருமகன் நாரா. நாச்சியப்பன் கடவுளின் பிள்ளை என்றும் இறையரசு நிறுவ வந்த திருமகன் என்றும் பெருமையாகப் பேசப்படுகின்ற இயேசு நாதரின் கதை இது. இயேசுநாதரின் வரலாறு கேட்டால் நெஞ்சம் உருகும். உலகில் ஏழைஎளியவர்களுக்காகவும், உண்மையான கடவுள் நம்பிக்கையை வளர்ப்பதற்காகவும் அவர் அடைந்த துன்பங்களின் தொகுப்பே அவருடைய வாழ்க்கையாகும். மனித குலத்தின் உயர்வுக்காகத் தம் துன்பங்களைப்…

தெய்வ அரசு கண்ட இளவரசன் – நாரா. நாச்சியப்பன்

தெய்வ அரசு கண்ட இளவரசன் நாரா. நாச்சியப்பன் போதி மரத்தடியில் ஞான மடைந்த மாதவச் சுடர் மணிதான் புத்த பெருமான். இன்ப வாழ்வு நிறைந்த அரண்மனையிலே பிறந்து அரசபோகத்தை அனுபவித்து வளர்ந்த புத்த பெருமான் ஞான மார்க்கத்தில் செல்ல நேர்ந்ததே, அவருடைய ‘தன்னைப் போல் பிரரையும் எண்ணும்’ சமத்துவ தத்துவம் தான். பிறர் துயர் கண்டு…

வேலின் வெற்றி – ரா. பி. சேதுப்பிள்ளை

வேலின் வெற்றி ரா. பி. சேதுப்பிள்ளை (கந்தபுராணத்தைத் தழுவி எழுதிய நூல்) தமிழ்நாடு என்றும் முருகனை வழிபடும் தகைமை சான்றது. கோலமாமயில்மீது குலவும் குழகன் என்றும், வேற்படையுடைய விமலன் என்றும், அரந்தை கெடுத்து வரந்தரும் இறைவன் என்றும் அப்பெருமானைப் போற்றுவர், தமிழ் மக்கள். அல்லல் விளைத்த அசுரர் குலத்தை வேரறுத்த, அறத்தினை நிலை நிறுத்திய முருகன்…

ஆலமும் அமுதமும் – திரு. வி. கலியாணசுந்தரனார்

ஆலமும் அமுதமும் திரு. வி. கலியாணசுந்தரனார் அணிந்துரை ஒருவன் “உலக வாழ்க்கையே வேண்டாம்” என்று கடவுள்திருப்பெயரை மட்டும் ஓதியவண்ண மிருக்கிறான்; மற்றொருவன்கடவுள் நினைவேயின்றி உலக வாழ்க்கையில் அழுந்திக் கிடக்கிறான். இவ்விருவருள் எவன் கடவுளிடத்தில் அன்புடையவனாவன்? சமயங்களின் கொள்கைகள் பலதிறத்தன. அவைகளுள்இங்கே குறிக்கத் தக்கன இரண்டு. ஒன்று, விடுதலைக்கு இயற்கைவாழ்க்கையைத் துறத்தல் வேண்டுமென்பது; மற்றொன்று,விடுதலைக்கு இயற்கையோடியைந்து வாழ்தல்…

வடலூரார் வாய்மொழி – சாமி சிதம்பரனார்

வடலூரார் வாய்மொழிசாமி சிதம்பரனார் இராமலிங்க அடிகளைத் தமிழர்கள் பலர் ஒரு அவதார புருஷராகவே நினைக்கின்றனர்; ஒரு தீர்க்கதரிசியாகப் போற்றுகின்றனர். அவருக்குப் பல இடங்களிலே கோவில்கள்; பல இடங்களிலே உருவச்சிலைகள்; பல இடங்களிலே பஜனை மடங்கள்; பல இடங்களிலே அவர் படத்திற்குக் கற்பூர தீபாரதனைகள்; பூஜை நைவேத்தியங்கள் அவர் பெயரால் பல சங்கங்கள், பல புத்தக சாலைகள்,…

திருவெம்பாவை – கி. வா. ஜகந்நாதன்

திருவெம்பாவை கி. வா. ஜகந்நாதன் பாவை நோன்பு தமிழ்நாட்டில் நவராத்திரிக் காலத்தில் பெண்கள் பசுவைப் போல ஒரு பொம்மை செய்வது உண்டு. அதற்கு அலங்காரம் செய்து, கோலாட்டம் போட்டு வீடுதோறும் எண்ணெய், பணம் முதலியவற்றை வசூல் செய்வார்கள். அதுபோல் பழங்காலத்தில் மார்கழி மாதம் முழுவதும் நெய், பால் முதலியவை உண்ணாமல் விரதம் இருந்து தை மாதத்தில்…

இராமன் கதை – பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி

இராமன் கதைபிரான்ஸிஸ் கிங்ஸ்பரி 1. பிறப்பும் இளமையும் ஆரியவர்த்தத்திலே கங்கையாற்றுக்கு வடக்கே உள்ளது கோசலை நாடு. அதற்கு இராசதானி அயோத்தி. அங்கே தசரதன் என்னும் வேந்தர்வேந்தன் பல்லாண்டு செங்கோல் செலுத்திவந்தான். அவன் அறங்கிடந்த நெஞ் சினன், மன்னுயிரைத் தன்னுயிர் போல நேசிப்பவன், கொடையிற் கற்பகத்தை வென்றவன், பொய்க்குப் பகை, மெய்க்கு அணி, புகழுக்கு வாழ்வு. இவனுக்கு…

சமரச தீபம் – திரு.வி. கலியாணசுந்தரனார்

சமரச தீபம்திரு.வி. கலியாணசுந்தரனார் உலகம்‌ இப்பொழுது எந்நிலையில்‌ இருக்கிறது? அதைச்‌ சொல்லலும்‌ வேண்டுமோ! உலகம்‌ இயற்கைச்‌ சன்மார்க்கத்தி னின்றும்‌ வழுவிச்‌ செயற்கைத்‌ துன்மார்க்கத்தில்‌ வீழ்ந்து வருகிறது. இது கண்கூடு. இவவீழ்ச்சிக்கு அடிப்படையான காரணம்‌ என்னை? மக்கள்‌ அறியாமையால்‌ அரசியலுக்கும்‌, புரோகிதத்துக்கும்‌ அடி மைப்பட்டு இரையாகி வருவதைச்‌ சிறந்த காரணமாகக்‌ குறிக்கலாம். ஆங்காங்குள்ள அரசியல்‌ வாதிகள்‌, பேர்‌,…

குசேலர் சரிதம் – சி. கணேசையர்

குசேலர் சரிதம் சி. கணேசையர் குசேலர் சரிதம் என்னும் இந்நூற்கு முதனூல் தமிழிலே, வல்லூர்த் தேவராச பிள்ளையால் இயற்றப் பட்ட குசேலோபாக்கியானம் என்னும் நூலாகும். அஃது செய்யுள் நடையில் இயற்றப்பட்டதாதலின் கற்றோ ரன்றி மற்றோரால் எளிதிலுணர்ந்து பயன்பெற முடியாததாகும். அதனால் அதனை, ஓர் உரை நடை நூலாக எழுதின் யாவர்க்கும் பயன்படுமென்று கருதி, அவ்வாறே இதனை…