
சிலப்பதிகாரமும் தமிழரும்
ம. பொ. சிவஞானம்
முன்னுரை
“சிலப்பதிகாரமும் தமிழரும் ” என்ற இச்சிறு நூல் சென்ற ஆண்டில் தில்லை-இளங்கோ மன்றத்தில் யான் ஆற்றிய சொற்பெருக்கே ஆகும்.
இதன் சுருக்கம், ‘தமிழ் முரசு’ தொகுதி-1, பகுதி- 12-ல் வெளிவந்துள்ளது. அதைப் படித்த நண்பர் பலரின் வற்புறுத்தலுக்கு இணங்கவே இந்தூலை வெளியிடலானேன்.
பண்டைய இலக்கியங்களை அரசியல் நோக்குடன் ஆராய்ந்து, அவற்றில் உள்ள இந்தக் காலத்திற்கு ஏற்ற கருத்துக்களை மக்களுக்குப் பயன்படுமாறு செய்யவேண்டும் என்பது எனது நெடுநாளைய அவா. அதை யொட்டியே இச்சிறுநூல் இன்று வெளிவருகின்றது.
ம. பொ. சிவஞானம்.



