Tag கலைஞர்

தப்பிவிட்டார்கள் – கலைஞர் மு. கருணாநிதி

தப்பிவிட்டார்கள் கலைஞர் மு. கருணாநிதி ‘தப்பிவிட்டார்கள்’ – சமூகத்தின் உண்மைப் பிரதிபலிப்புகள் நிறைந்த கதைத் தொகுதி. சமுதாயக் கொடுமையினின்று தப்பிவிட்டவர்கள், அண்ணனென எண்ணி ஆசைப்பார்வை பார்த்தவளை தன்காமத்துக்குப் பலியாக்க எண்ணும் சபலக்காரர்கள், சமூகத்தின் கோரப்பிடியால் குற்றம்சாட்டப்படும் நிரபராதி, உதவி செய்ய வந்தவரிடமே ஏமாற்று வித்தையைக் காட்டி பின் தானே மற்றொருவனால் ஏமாற்றப்படும் மோசக்காரன் ஆகிய சமூக…

கண்ணடக்கம் – கலைஞர் மு. கருணாநிதி

கண்ணடக்கம் கலைஞர் மு. கருணாநிதி கண்ணடக்கம் பக்தன் ஒருவன் பதைக்கப் பதைக்க ஓடினான். அவன் கால்கள் தடுமாறின. வியர்வையால் மேனி குளமாயிற்று தலைமுடி அலங்கோலமாய் விரிந்து காற்றில் பறந்தது. நெற்றியிலே பூசியிருந்த திருநீறும், அதன் மேல் வைத்திருந்த அகலமான குங்குமப் பொட்டுங் கூட வியர்வையிலே கரைந்து ரத்தமும் சீழும் போல அவன் கன்னங்களில் வழிந்து கொண்டிருந்தன.…

பலிபீடம் நோக்கி – கலைஞர் மு. கருணாநிதி

பலிபீடம் நோக்கி கலைஞர் மு. கருணாநிதி புத்தகத்தைப் பற்றி ‘எரிமலை’யின் மூன்றாவது பொறியாகப் பிறக்கிறது ‘பலிபீடம் நோக்கி.’ புரட்சிகரமான சிந்தனையும் புதுமையான போக்கும் மிளிர்கின்றன இந் நூலிலே. கருத்திலும் சொல்கின்ற முறையிலும் புதுமையைக் கையாண்டிருக்கிறார் இதன் ஆசிரியர். தோழர் மு. கருணாநிதியின் பெயரை தமிழுலகம் நன்கறியும். நாடகாசிரியர். புதுயுகம் காண விரும்பும் இளைஞர். தீவிரமான கருத்துக்…

முக்கனி – கலைஞர் மு. கருணாநிதி

முக்கனி கலைஞர் மு. கருணாநிதி இளைஞர் சமுதாயத்திற்கு இன உணர்வையும் தன் மானத்தையும் ஊட்டி, நாட்டின் எதிர்கால நல்வாழ்வுக்கு வழிவகுக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் எழுத்தும் பேருரைகளும் நூல் வடிவில் வெளிவர கழக இளைஞர் அணி எடுத்துக்கொள்ளும் முயற்சியின் தொடர்ச்சியாக, 1984 பிப்ரவரி 15, 16 ஆகிய நாட்களில் புதுக்கோட்டை, தஞ்சை, பூண்டி ஆகிய இடங்களிலுள்ள…

முடியாத தொடர் கதை – கலைஞர் மு. கருணாநிதி

முடியாத தொடர் கதைகலைஞர் மு. கருணாநிதி மலர்ந்த பூவாடையென…தெளிந்த புனலோடையென…சித்திரப் பட்டாடையென…முத்தமிழ்ப் பாலாடையென… வித்தாரத் தமிழுலகறிந்த வியத்தகு எழுத்தரசராம் கலைஞரின் இதமான கருத்தோடை – இனிதான கனிச்சாறு – இந்நூல். ஒரு சமுதாயத்தை மாற்றமுறச் செய்யவும், உன்னத மானவொரு நிலைக்கு ஏற்றமுறச் செய்யவும் செறிவார்ந்த சிந்தனைகளின் மலர்ச்சியாம் எழுத்தோவியங்களால் முடியும் என்பதை அழுத்தமுறச் சாதித்துக் காட்டிய…

கொலைக்களம்! – கலைஞர் மு. கருணாநிதி

கொலைக்களம்! கலைஞர் மு. கருணாநிதி இன்பத்துளி! காலம்! காலத்தின் கோலம்! எப்படி யெப்படியோ இருக்கிறது,மாறுகிறது, மாறிக் கொண்டே வருகிறது! இரண்டாவது உலக மகா யுத்தம் முடிந்தது, உலக வாழ்வை உருமாற்றி விட்டு ! மீண்டும் யுத்தம்! யுத்த பேரிகை! மீண்டும் களம்! போர்க்களம்! கொலைக்களம்! அமைதி – புயல் – வாழ்வு – சாவு, சமாதானம்…

நளாயினி – கலைஞர் மு. கருணாநிதி

நளாயினி கலைஞர் மு. கருணாநிதி நளாயினி அழகான பெண், ஒளிமுகம் படைத்த உருக்குலையா மங்கை. வெள்ளை உடையால் அவள் அன்ன நடைக்கு அழகு சேர்க்கிறாள். சிவந்த கழுத்திலே ஒரு கறுப்பு மணி மாலை. அந்தக் கோதி முடித்த கூந்தலையுடைய கோதை – தலையிலே ஒரு கூடையுடன் தெருவிலே போகிறாள். அப்பழுக்கற்ற யௌவனத்தின் தனித்தன்மை வாய்ந்த அழகு…

நடுத்தெரு நாராயணி – கலைஞர் மு. கருணாநிதி

நடுத்தெரு நாராயணி விடிந்தால் தீபாவளி- இரவு முழுதும் ஊரெங்கும் வாண வேடிக்கைகள். தெருவுக்குத் தெரு- வீட்டுக்கு வீடு – போட்டி போட்டுக் கொண்டு வாணம் கொழுத்தி மகிழ்ந்தனர். சந்தர்ப்ப வாதிகளின் பச்சோந்தி உள் ளம் போல மத்தாப்புகள் பல நிறம் காட்டின. ஒரு சில அரசியல் தலைவர்களின் போராட்ட அறிவிப்புகள் போல அவுட் வாணங்கள் ஆகாயத்தில்…

அக்கினிக்குஞ்சு ! – கலைஞர் மு. கருணாநிதி

அக்கினிக்குஞ்சு !கலைஞர் மு. கருணாநிதி பாரதி விழாவில் தலைவர் கலைஞர் சென்னை கிண்டியிலுள்ள இந்திய தொழில் நுட்பக் கழகத்தின் முத்தமிழ் மன்றம் மற்றும் மாணவர் தமிழ்ப் பேரவை சார்பில், 29-10-1985 அன்று நடைபெற்ற பாரதி விழாவில், தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய பேருரையை இந்நூல் வடிவில் தலைமைக் கழகம் பெருமையோடு வெளியிடுகிறது.