சைவத்தின் சமரசம்
திரு. வி. கலியாணசுந்தரனார்

கடவுள் திருத்தொண்டு

தேவாரம்

நன்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்க டம்பத் திருக்கரக் கோயிலான்
தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்
என்க டன்பணி செய்துகி டப்பதே.

– அப்பர்

திருவாசகம்

அன்றே யென்றன் ஆவியும் உடலும்
உடைமை யெல்லாமுங்
குன்றே யனையாய்! என்னையாட் கொண்ட
போதே கொண்டிலையோ
இன்றோ ரிடையூறு எனக்குண்டோ
எண்டோள் முக்கண் எம்மானே!
நன்றே செய்வாய் பிழைசெய்வாய்
நானோ இதற்கு நாயகமே.

– மாணிக்கவாசகர்

பெரிய புராணம்

வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.

– சேக்கிழார்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *