Tag கி. வா. ஜகந்நாதன்

எல்லாம் தமிழ் – கி. வா. ஜகந்நாதன்

எல்லாம் தமிழ் கி. வா. ஜகந்நாதன் இதற்குமுன் நான் எழுதியுள்ள புது மெருகு என்ற புத்தகத்தைப் போன்றது இது. சங்க நூல்களில் உள்ள குறிப்புக்களைக் கொண்டு பின்னிய வாலாறுகளும், பிற காலத்துச் சதகங்களிலும் தனிப்பாடல்களிலும் உள்ள செய்திகளைக் கொண்டு உருவாக்கிய கதைகளும், கேள்வியினால் தெரிந்தவற்றை ஆதாரமாகக் கொண்ட கதைகளும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்றன. தமிழ்ப்…

ஆனந்தத் தேன் – கி. வா. ஜகந்நாதன்

ஆனந்தத் தேன் கி. வா. ஜகந்நாதன் முகவுரை தமிழ்நாட்டில் கடவுளை நினைப்பதற்கு வாய்ப்பாகப் பல அமைப்புக்களும், பொருள்களும் வழக்கங்களும் இருக்கின்றன. கோயில்கள், புராணங்கள், நூல்கள் ஆகியவை கடவுளின் நினைவை எப்போதும் பசுமையாக இருக்கும்படி செய்கின்றன. மக்களுக்கு இடும் பெயர்களும், பண்டிகைகளும் நினைவுக்கு உரமூட்டுகின்றன. கடவுள் ஒருவனே என்ற அடிப்படையான உண்மையை நாம் மறப்பதில்லை. ஆனாலும் அன்பர்களின்…

தமிழின் வெற்றி – கி. வா. ஜகந்நாதன்

தமிழின் வெற்றி கி. வா. ஜகந்நாதன் இந்தப் புத்தகத்தில் வரும் பத்து வரலாறுகளும் தமிழ் புலவர்களைப் பற்றியவை. அவர்கள் தம்முடைய கவித் திறத்தால் பிறரை வியப்புள் ஆழ்த்துவதும், குற்றம் தோன்றாமல் மாற்றிச் சமாதானம் சொல்வதும், உயிரை மீட்பதும், தக்காரை வாழ்த்தித் தகாதவரைக் குறிப்பாகப் பழிப்பதும், பாடல்களை வசையாகத் தொடங்கி இசையாக மாற்றுவதும், மாறுபட்ட கருத்துடையவர்களையும் மாற்றிப்…

கவிஞர் கதை – கி. வா. ஜகந்நாதன்

கவிஞர் கதை கி. வா. ஜகந்நாதன் ஒளவைப் பாட்டி ஒளவைப்பாட்டி என்று சொன்னாலே ஒரு கிழ உருவம் உங்கள் மனக்கண்முன் தோன்றும். தமிழிலே அந்தப் பாட்டி பாடிய பாட்டுக்கள் பல உண்டு. நீங்கள் பள்ளிக் கூடத்தில் வாசிக்கிற ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி இவையெல்லாம் அந்தப் பாட்டி பாடியவைகளே. ஆனால் அந்தப் பாட்டிக்கு முன்பே மற்றோர் ஒளவை…

சிற்றம்பலம் – கி. வா. ஜகந்நாதன்

சிற்றம்பலம் கி. வா. ஜகந்நாதன் சைவத் திருமுறைகள் பன்னிரண்டிலும் முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தப் பெருமான் திருவாய் மலர்ந்தருளியவை. இந்த மூன்று திருமுறைகளிலும் இப்போதுள்ள பதிகங்கள் 383. இவற்றில் முதல் திருமுறையில் 136 திருப்பதிகங்களும், இரண்டாம் திருமுறையில் 122 பதிகங்களும், மூன்றாந் திருமுறையில் 125 பதிகங்களும் அடங்கியுள்ளன. திருமுறைகண்ட புராணத்தில் நம்பியாண்டார் நம்பிகள், “பண்புற்ற திருஞான…

ஞானக் கொழுந்து – கி. வா. ஜகந்நாதன்

ஞானக் கொழுந்து கி. வா. ஜகந்நாதன் சைவத் திருமுறைகள் பன்னிரண்டில் பத்தாவதாக அமைந்தது திருமந்திரம். இதனை இயற்றியவர் திருமூலர். அவர் கைலாயத்தில் திருநந்திதேவருடைய திருவருள் பெற்ற சிவயோகிகளுள் ஒருவர். அவர் அணிமாதி சித்திகள் எட்டும் கைவரப் பெற்றவர். பொதிகை மலையில் வாழும் அகத்தியருக்கு நண்பர். தென்னாடு சென்று அம் முனிவருடன் சில காலம் இருந்து வரலாம்…

இன்ப மாலை – கி. வா. ஜகந்நாதன்

இன்ப மாலை கி. வா. ஜகந்நாதன் சங்க நூல்களில் எட்டுத் தொகை என்னும் வரிசை யில் ஒன்றாகிய அகநானூறு அகப்பொருள் பற்றிய நானூறு செய்யுட்களை உடையது. இதனை அகமென்றும், அகப்பாட்டென்றும் சொல்வது உண்டு. பல புலவர்களின் அகத்துறைப் பாடல் தொகுதிகளாகிய குறுந் தொகை, நற்றினை, அகநானூறு என்ற மூன்றில் அடியளவினால் நீண்ட பாடல்களை உடையதாதலால் இதற்கு…

அதிசயப் பெண் – கி. வா. ஜகந்நாதன்

அதிசயப் பெண் கி. வா. ஜகந்நாதன் கலைமகள் ஆசிரியர் உயர்திரு கி. வா. ஜகந்நாதன் அவர்களைத் தமிழ் உலகம் நன்றாக அறியும். இணையற்ற ஆசிரியராக விளங்கும் அவர்கள் அவ்வப்போது குழந்தைகளுக்காக எழுதிய கதைகள் இவை. தமிழ்த் தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்களுடைய அன்புக்குகந்த மாணவராகப் பயின்ற ஆசிரியர் அவர்கள் அந்த மரபிலேயே தமிழ்…

திருவெம்பாவை – கி. வா. ஜகந்நாதன்

திருவெம்பாவை கி. வா. ஜகந்நாதன் பாவை நோன்பு தமிழ்நாட்டில் நவராத்திரிக் காலத்தில் பெண்கள் பசுவைப் போல ஒரு பொம்மை செய்வது உண்டு. அதற்கு அலங்காரம் செய்து, கோலாட்டம் போட்டு வீடுதோறும் எண்ணெய், பணம் முதலியவற்றை வசூல் செய்வார்கள். அதுபோல் பழங்காலத்தில் மார்கழி மாதம் முழுவதும் நெய், பால் முதலியவை உண்ணாமல் விரதம் இருந்து தை மாதத்தில்…

கோவூர் கிழார் – கி. வா. ஜகந்நாதன்

கோவூர் கிழார்கி. வா. ஜகந்நாதன் 1. சோழன் நலங்கிள்ளி “இப்போது பட்டத்துக்கு வந்திருக்கும் மன்னன் இளமையுடையவன் என்று சொல்கிறார்களே!” “சொல்கிறது என்ன? இளமையை உடையவன்தான். அதனால் என்ன? சிங்கத்தின் குட்டியென்றால் யானையை வெல்லாதா?” “எத்தனையோ வீரச் செயல்களைச் செய்து தம் வெற்றியைப் பிற நாடுகளிலும் நாட்டிய மன்னர்கள் பிறந்த குலம் ஆயிற்றே, சோழகுலம்! இந்தக் குலத்தின்…