Tag கி. வா. ஜகந்நாதன்

விளையும் பயிர் – கி. வா. ஜகந்நாதன்

விளையும் பயிர்கி. வா. ஜகந்நாதன் காலத்தில் இப்படி விளங்கியது என்று சொல்வது வாழ்க்கை வரலாறு பிற்காலத்தில் புகழ்பெற்று வாழ்ந்த பெரியவர்களின் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளே அவர்களுடைய வரலாறுகளிலிருந்து அறிகிறோம். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்ற பழமொழியை உண்மைப் படுத்தும் நிகழ்ச்சிகளைப் பெரும்பாலும் அந்த வரலாறுகளிலேக் காணலாம். சில பெரியவர்களின் இளமைப் பருவ நிகழ்ச்சிகளை விரித்து…

பவள மல்லிகை – கி.வா. ஜகந்நாதன்

பவள மல்லிகைகி.வா. ஜகந்நாதன் இந்தப் புத்தகம் என்னுடைய ஐந்தாவது கதைத் தொகுதியாகும். இதற்குமுன் ‘கலைஞன் தியாகம்’ ‘நீலமணி’, ‘அறுந்த தந்தி’, ‘கலைச்செல்வி, என்ற கதைத் தொகுதிகள் வெளியாகியிருக்கின்றன. இதில் எட்டுக் கதைகள் இருக்கின்றன. இந்தத் தொகுதியின் பின்னாலே ‘கதைக்குக் கால் உண்டு’ என்ற கட்டுரையைச் சேர்த்திருக்கிறேன். அதில் உள்ளவற்றை இந்த முன்னுரையிலேயே சேர்த்திருக்கலாம். ஆனாலும் கதை…

நல்ல சேனாபதி – கி. வா. ஜகந்நாதன்

நல்ல சேனாபதி கி. வா. ஜகந்நாதன் தமிழ்நாட்டில் பல காலமாகவே புலவர்களும் புரவலர்களும் வாழ்ந்து தமிழை வளர்த்திருக்கிறார்கள். புலவர்கள் வீரத்தைப் பாராட்டுவார்கள்; கொடைத் திறத்தைப் பாடிப் புகழ்வார்கள். பெரிய போரில் வெற்றி பெற்ற பெரு மன்னர்களுடைய வரலாற்றை நாட்டு வரலாறுகளில் காணலாம். ஆயினும் சிறிய போர்களில் தம்முடைய வீரத்தைக் காட்டிய வீரர்களையும், மிகவும் சிக்கலான சமயங்களில்…

வாழ்க்கைக் கூத்து – கி. வா. ஜகந்நாதன்

வாழ்க்கைக் கூத்து கி. வா. ஜகந்நாதன் அருணகிரிநாதர் முருகனுடைய திருவருளால் புலமை பெற்றவர்; கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர்; அவன் திருவருளால் பிரபஞ்சச் சேற்றைக் கழுவித் தூய ஆனந்த வாரியில் ஆழும் பேறு பெற்றவர்; தாம் பெற்ற இன்பத்தை உலகமும் பெற வேண்டும் என்ற கருணை உடையவர். அந்தக் கருணையினால் பாடிய பாடல்களே திருப்புகழ், கந்தர் அலங்காரம்,…

நாலு பழங்கள் – கி.வா.ஜகந்நாதன்

நாலு பழங்கள் – கி.வா.ஜகந்நாதன் குழந்தைகளுக்குக் கதை சொல்லுவதென்பது எல்லா நாடுகளிலும் உள்ள வழக்கம். வயசான மூதாட்டிகளும், கிழவர்களும் தம் பேரன் பேத்திகளுக்குக் கதை சொல்லி உற்சாகப்படுத்தி வருவார்கள். அதனால் அந்த முதியவர்களுக்கும் மகிழ்ச்சி; குழந்தைகளுக்கும் கொண்டாட்டம். குழந்தைகளின் கதைகளில் அதிசயங்களும், அற்புதங்களும் இருந்தால் அவற்றை அவர்கள் நன்றாக ரசிப்பார்கள். “அப்படிச் செய்ய முடியுமா? அது…

நல்ல பிள்ளையார் – கி.வா.ஜகந்நாதன்

நல்ல பிள்ளையார் கி.வா.ஜகந்நாதன் சிறுவர்கள் படித்து மகிழ்வதற்குரிய பத்துக் கதைகள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. நம் நாட்டில் வழங்கிவரும் நாடோடிக் கதைகள் சிலவற்றைத் தழுவி எழுதிய கதைகளையும் நானாகக் கற்பனை செய்து எழுதிய கதைகளையும் இதில் காணலாம். குழந்தைகளுக்குக் கதை கேட்பதென்றால் மிகவும் ஆசை, என்னுடைய பேரன் சிரஞ்சீவி குகனுக்கு அவ்வப் போது கதைகள் சொல்வது…

அன்பின் உருவம் – கி. வா. ஜகந்நாதன்

அன்பின் உருவம் கி. வா. ஜகந்நாதன் “திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்” என்பது அநுபவத்தில் கனிந்து வந்த பழமொழி. என்பையும் உருக்கும் பாடல்களை மாணிக்கவாசக சுவாமிகள் பாடினார். “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்” என்று கூறும் விவிலிய நூலைப் படித்த கிறிஸ்தவராகிய ஜி.யூ. போப் துரை திருவாசகத்தைப் படித்தார்; உருகினார். “இவரைக் காட்டிலும் எளிமையுள்ளவர் யார்?”…

பேசாத நாள் – கி.வா. ஜகந்நாதன்

பேசாத நாள் – கி.வா. ஜகந்நாதன் திருநாவுக்கரசர் தேவாரங்களின் கடைசித் திருமுறையாகிய ஆறாந் திருமுறையிலிருந்து எடுத்த பதின்மூன்று பாசுரங்களுக்குரிய விளக்கக் கட்டுரைகளை இந்தப் புத்தகத்திற் காணலாம். ஆறாந் திருமுறையில் 99 பதிகங்களும் 981 பாடல்களும் இருக்கின்றன. இந்தப் பதிகங்கள் யாவும் திருத்தாண்டகங்கள். திருத்தாண்டகம் என்பது யாப்பினாற் பெற்ற பெயர். தாண்டகம் என்பது ஒருவகைச் செய்யுளுக்குரிய பெயர்.…

கோயில் மணி – கி.வா. ஜகந்நாதன்

கோயில் மணி – கி.வா. ஜகந்நாதன் இதில் உள்ள சிறு கதைகள் வெவ்வேறு சமயங்களில் எழுதியவை. அவ்வப்போது பத்திரிகைக்காரர்கள் கேட்டபோது எழுதி அளித்தவை. இவை யாவுமே பல பத்திரிகைகளிலும் மலர்களிலும் வெளியானவை. வெவ்வேறு மனநிலைகள் இருந்த போது எழுதியவையாதலின் போக்கும் சுவையும் வெவ்வேறாக இருக்கலாம். இப்போது இவை ஒரு தொகுதியாக அமுதநிலைய வெளியீடாக வெளியாகின்றன. இதற்கு…

அருளாளன் – கி. வா. ஜகந்நாதன்

அருளாளன் கி. வா. ஜகந்நாதன் ‘திருமுறை மலர்கள்’ என்ற வரிசையில் இது ஏழாவது மலர். இதனுடன் தேவாரப் பாடல் விளக்கம் நிறைவேறுகிறது. இந்தப் புத்தகங்களைத் தமிழ் அன்பர்கள் மிக்க ஆவலோடு பெற்றுப் படித்து இன்புறுவதை அவர்கள் எழுதும் கடிதங்களிலிருந்து தெரிந்துகொள்கிறேன். சிறப்பாக இலங்கைத் தமிழர்கள் இவ் வெளியீடுகளுக்கு அளித்துவரும் ஆதரவு மிகப் பாராட்டு வதற்குரியது. அவர்களுக்கு…