Tag கி. வா. ஜகந்நாதன்

சிற்றம்பலம் – கி. வா. ஜகந்நாதன்

சிற்றம்பலம் கி. வா. ஜகந்நாதன் சைவத் திருமுறைகள் பன்னிரண்டிலும் முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தப் பெருமான் திருவாய் மலர்ந்தருளியவை. இந்த மூன்று திருமுறைகளிலும் இப்போதுள்ள பதிகங்கள் 383. இவற்றில் முதல் திருமுறையில் 136 திருப்பதிகங்களும், இரண்டாம் திருமுறையில் 122 பதிகங்களும், மூன்றாந் திருமுறையில் 125 பதிகங்களும் அடங்கியுள்ளன. திருமுறைகண்ட புராணத்தில் நம்பியாண்டார் நம்பிகள், “பண்புற்ற திருஞான…

ஞானக் கொழுந்து – கி. வா. ஜகந்நாதன்

ஞானக் கொழுந்து கி. வா. ஜகந்நாதன் சைவத் திருமுறைகள் பன்னிரண்டில் பத்தாவதாக அமைந்தது திருமந்திரம். இதனை இயற்றியவர் திருமூலர். அவர் கைலாயத்தில் திருநந்திதேவருடைய திருவருள் பெற்ற சிவயோகிகளுள் ஒருவர். அவர் அணிமாதி சித்திகள் எட்டும் கைவரப் பெற்றவர். பொதிகை மலையில் வாழும் அகத்தியருக்கு நண்பர். தென்னாடு சென்று அம் முனிவருடன் சில காலம் இருந்து வரலாம்…

இன்ப மாலை – கி. வா. ஜகந்நாதன்

இன்ப மாலை கி. வா. ஜகந்நாதன் சங்க நூல்களில் எட்டுத் தொகை என்னும் வரிசை யில் ஒன்றாகிய அகநானூறு அகப்பொருள் பற்றிய நானூறு செய்யுட்களை உடையது. இதனை அகமென்றும், அகப்பாட்டென்றும் சொல்வது உண்டு. பல புலவர்களின் அகத்துறைப் பாடல் தொகுதிகளாகிய குறுந் தொகை, நற்றினை, அகநானூறு என்ற மூன்றில் அடியளவினால் நீண்ட பாடல்களை உடையதாதலால் இதற்கு…

அதிசயப் பெண் – கி. வா. ஜகந்நாதன்

அதிசயப் பெண் கி. வா. ஜகந்நாதன் கலைமகள் ஆசிரியர் உயர்திரு கி. வா. ஜகந்நாதன் அவர்களைத் தமிழ் உலகம் நன்றாக அறியும். இணையற்ற ஆசிரியராக விளங்கும் அவர்கள் அவ்வப்போது குழந்தைகளுக்காக எழுதிய கதைகள் இவை. தமிழ்த் தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்களுடைய அன்புக்குகந்த மாணவராகப் பயின்ற ஆசிரியர் அவர்கள் அந்த மரபிலேயே தமிழ்…

திருவெம்பாவை – கி. வா. ஜகந்நாதன்

திருவெம்பாவை கி. வா. ஜகந்நாதன் பாவை நோன்பு தமிழ்நாட்டில் நவராத்திரிக் காலத்தில் பெண்கள் பசுவைப் போல ஒரு பொம்மை செய்வது உண்டு. அதற்கு அலங்காரம் செய்து, கோலாட்டம் போட்டு வீடுதோறும் எண்ணெய், பணம் முதலியவற்றை வசூல் செய்வார்கள். அதுபோல் பழங்காலத்தில் மார்கழி மாதம் முழுவதும் நெய், பால் முதலியவை உண்ணாமல் விரதம் இருந்து தை மாதத்தில்…

கோவூர் கிழார் – கி. வா. ஜகந்நாதன்

கோவூர் கிழார்கி. வா. ஜகந்நாதன் 1. சோழன் நலங்கிள்ளி “இப்போது பட்டத்துக்கு வந்திருக்கும் மன்னன் இளமையுடையவன் என்று சொல்கிறார்களே!” “சொல்கிறது என்ன? இளமையை உடையவன்தான். அதனால் என்ன? சிங்கத்தின் குட்டியென்றால் யானையை வெல்லாதா?” “எத்தனையோ வீரச் செயல்களைச் செய்து தம் வெற்றியைப் பிற நாடுகளிலும் நாட்டிய மன்னர்கள் பிறந்த குலம் ஆயிற்றே, சோழகுலம்! இந்தக் குலத்தின்…

கிழவியின் தந்திரம் – கி. வா. ஜகந்நாதன்

கிழவியின் தந்திரம் கி. வா. ஜகந்நாதன் இந்தப் புத்தகத்தில் குழந்தைகள் படித்து மகிழ்வதற்கு உரிய பதினைந்து கதைகள் அடங்கியிருக்கின்றன. இந்தக் கதைகள் புலவர்களுடைய ஆற்றலும், அறிவுடைய பெண்களின் சாமார்த்தியமும், மெய் பேசுதல், தாயினிடம் அன்பு வைத்தல், விடா முயற்சி செய்தல், தர்மம் தலைகாத்தல் முதலிய நீதிகளைப் புலப்படுத்துகின்றன. தமிழ்ப் புலவர்களின் அறிவாற்றலை அறிந்து விளங்கும் வகையில்…

இலங்கைக் காட்சிகள் – கி. வா. ஜகந்நாதன்

இலங்கைக் காட்சிகள் கி. வா. ஜகந்நாதன் முதல் முதலாக நான் இலங்கைக்கு 1951-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்று 18 நாட்கள் தங்கினேன். தலாது ஒயாவில் உள்ள திரு கணேஷ் என்னும் அன்பர் கண்டித் தமிழ் விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென்று அழைத்தார். அதனல் சென்றேன். தமிழ் விழா நடைபெற்ற பிறகு கிட்டத்தட்ட ஆயிரம் மைல்…

அமுத இலக்கியக் கதைகள் – கி. வா. ஜகந்நாதன்

அமுத இலக்கியக் கதைகள் கி. வா. ஜகந்நாதன் தமிழ் நாட்டில் பழங்கால முதற்கொண்டு வீரம் மிக்க மன்னர்கள் வாழ்ந்தார்கள்; வள்ளல்கள் விளங்கினர்கள். அவர்களுடைய புகழைப் புலவர்கள் பாடினர்கள். அந்தப் பாடல்கள் புலவர்களின் பெருமையையும், பாடப்பெற்ற பெருமக்களின் பெருமையையும் ஒருங்கே தெரிவிக்கின்றன. அந்தப் பாடல்களால் பல வீரர்களுடைய வரலாறுகள் தெரிகின்றன; பெரு மன்னர்களும் குறுகிலமன்னர்களும் செல்வர்களும் செய்த…

பாண்டியன் நெடுஞ்செழியன் – கி. வா. ஜகந்நாதன்

பாண்டியன் நெடுஞ்செழியன்கி. வா. ஜகந்நாதன் சங்க காலத்து இலக்கியங்கள் நமக்கு அறிமுகப்படுத்தும் பாண்டிய மன்னர்களில், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இளமையிலே அரசாளப் புகுந்து பல போர்களில் வெற்றி பெற்று வண்மையிலும் திண்மையிலும் சிறந்து நின்றான். அவன் இயல்புகளைப் பத்துப் பாட்டில் உள்ள மதுரைக் காஞ்சி, நெடுநல் வாடை என்ற இரண்டு நூல்களும் எடுத்துரைக்கின்றன. அவன் வரலாற்றோடு…