Category ஆன்மீகம்

என் கடன் பணிசெய்துகிடப்பதே ! – திரு. வி. கலியாணசுந்தரனார்

என் கடன் பணிசெய்துகிடப்பதே ! திரு. வி. கலியாணசுந்தரனார் அறிவு விளக்கமும் அன்பு நிகழ்ச்சியும் மக்கள் வாழ்விற்கு இன்றியமையாதன. வினை இல்வழி அறிவும் விளக்கமுறாது; அன்பும் நிகழாது. அறிவு விளக்கத்துக்கும் அன்பு நிகழ்சசிக் கும் ஊற்றாயிருப்பது வினை. வினை, அறிவுக்கும் அன்புக்குங் கொழுகொம்பு போன்றது. ஆதலால், மக்கள் வினைவழி அறிவு பண்பட்டு அன்பு நிகழும். அறிவு…

சன்மார்க்க போதமும் திறவும் – திரு. வி. கலியாணசுந்தரனார்

சன்மார்க்க போதமும் திறவும் திரு. வி. கலியாணசுந்தரனார் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் உலகம் பலவிதம் என்பது பழமொழி. இப்பழமொழி உலகத்தின் புறத்தோற்றத்தை ஒட்டிப் பிறந்தது. தோன்றும் புறத்தின் பலவிதம், அகத்தின் ஒரு விதத்தினது பரிணாமம். பன்மை காரணமா? காரியமா? ஒருமை இன்றிப் பன்மை இன்மையான், பன்மை காரியம் என்பதை நிறுவிக் காட்டுதற்கு விரிவுரை வேண்டுவதில்லை.…

சமரச சன்மார்க்கத் திறவு – திரு. வி. கலியாணசுந்தரனார்

சமரச சன்மார்க்கத் திறவு திரு. வி. கலியாணசுந்தரனார் முன்னுரை ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ ‘சன்மார்க்க போதம்’ என்றொரு நூல் என்னால் இயற்றப்பட்டது. அந்நூலுடன் தொடர்பு கொண்டது இந்நூல். அது பொது நூல். இது சிறப்பு நூல். பொதுமையே சிலர் உள்ளத்தை நிறைவு செய்யும். சிலர் உள்ளத்தைப் பொதுமை நிறைவு செய்வதில்லை. இவருக்குச் சிறப்புந் தேவை.…

சைவத்தின் சமரசம் – திரு. வி. கலியாணசுந்தரனார்

சைவத்தின் சமரசம் திரு. வி. கலியாணசுந்தரனார் அணிந்துரை உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே – அப்பர் உலகம் பலவிதம் என்பது பழமொழி. இப்பொது மொழி அவரவர் உலகுக்கேற்ற பொருளை விளக்குவது. ஒவ்வொருவர்க்கு ஒவ்வோருலகுண்டு. எனக்கும் ஓருலகுண்டு. அவ்வுலகில் நின்று பலவிதத்தை இருவிதத்தில் அடக்க எண்ணுகிறேன். ஒருவிதம் வேறுபடுஞ் சமயமெலாம் புகுந்து பார்க்கின், விளங்குபரம் பொருளே நின்…

சைவசித்தாந்த உண்மை வரலாறு – கா. சுப்பிரமணிய பிள்ளை

சைவசித்தாந்த உண்மை வரலாறு கா. சுப்பிரமணிய பிள்ளை சைவ சித்தாந்த உண்மை வரலாறு என்பது செந்தமிழ்ச் செல்வி என்னும் திங்கட்டாளின்கண் திருவாளர் சுப்பிரமணிய பிள்ளை யவர்கள் எழுதிய சைவசித்தாந்த வரலாறேயாம். தன்கண் கடவுள், உயிர், உலகம் என்ற முப்பொருள்களின் இயல்பும் தொடர்பும் எனைத்தென்றும், சைவநெறி பண்டைத் தமிழ் மக்கள் நெறி யேயாமென்றும், சிவம் என்ற சொல்…

மாணிக்கவாசகர் மாட்சி – மறைமலை அடிகள்

மாணிக்கவாசகர் மாட்சி மறைமலை அடிகள் இது, பல்லாவரம் பொதுநிலைக் கழக ஆசிரியர் மறைமலையடிகள் இயற்றிய “மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்” என்னும் ஆராய்ச்சிப் பெருநூலின் முகவுரையினின்றும் எடுக்கப்பட்டது வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தைநான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலேதேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்ஊன்கலந்து வுயிர்கலந்து வுவட்டாமல் இனிப்பதுவே. வருமொழிசெய் மாணிக்க வாசகநின் வாசகத்தில்ஒருமொழியே என்னையுமென் உடையனையும்ஒன்றுவித்துத் தருமொழியா மென்னில்இனிச்…

திருவருட்பாச் சிந்தனை – க. வெள்ளைவாரணனார்

திருவருட்பாச் சிந்தனை க. வெள்ளைவாரணனார் முன்னுரை திருவிளங்கச் சிவயோக சித்தியெலாம் விளங்கச்சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தேதிருக்கூத்து விளங்க ஒளிசிறந்த திருவிளக்கேஉருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்கஉலகமெலாம் விளங்க அருள் உதவு பெருந்தாயாம்மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்கவயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே! அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துத் தமிழ்த் துறைத் தலைவராய் விளங்கிய பன்மொழிப் புலவர்…

அப்பர் தேவார அமுது – கி. வா. ஜகந்நாதன்

அப்பர் தேவார அமுதுகி. வா. ஜகந்நாதன் தமிழ்நாட்டில் கோயில்கள் மிகுதி. சிவபெருமானுடைய திருக்கோயில்களும், திருமால் திருக்கோயில்களும் பல. “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்றும், “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்றும் ஆன்றோர்கள் அறிவுரை கூறிய நாடு இந்த நாடு. சிற்பச் சிறப்பாலும் புராண வரலாற்றாலும் சிறப்பை உடையவை திருக்கோயில்கள். அவற்றில் தேவார திருவாசகங்களாலும்,…

வள்ளலார் வகுத்த வழிகள் – பாலூர் கண்ணப்ப முதலியார்

வள்ளலார் வகுத்த வழிகள் பாலூர் கண்ணப்ப முதலியார் வள்ளலார் என்று இங்குக் குறிப்பிடப்பட்டவர் வடலூர் இராமலிங்க சுவாமிகளே ஆவார். இவர் மக்கள் நல்வழியில் சென்று உய்யும் பொருட்டுத் திருவருட்பா என்னும் சீரிய நூலைப் பாடி அருளியதோடு நில்லாமல், பற்பல உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார். அவ்வுரைநடை நூல்களில் அமைந்துள்ள கருத்துக்கள் அருமையும் பெருமையும் வாய்ந்தவை. ஆனால், மக்கள்…

கிழக்கும் மேற்கும் – அ. ச. ஞானசம்பந்தன்

கிழக்கும் மேற்கும் அ. ச. ஞானசம்பந்தன் 1969ஆம் ஆண்டு பூ.சா.கோ.நிறுவனத்தார் புரவலர் திரு. அரங்கசாமி நாயுடு அவர் களின் நினைவுச் சொற்பொழிவுகளை நிகழ்த்துமாறு அழைத்தனர்; அவர்களே இத்தலைப்புக்களையும் தந்து பேசுமாறு பணித்தனர். தமிழாசிரியனின் எல்லைக்கு அப்பாற்பட்டுள்ள இத்தலைப்புக்கள் என்னை வியப்படையச் செய்தன. எனினும், ஒரு தமிழ் மாணவன் இத்தலைப்புக்களைப் பற்றி எவ்வாறு சிந்திக்கின்றான் என்பதை அறியும்…