ஸ்ரீ ராமகிருஷ்ணர் - ஒரு தீர்க்கதரிசி 
வெ. சாமிநாத சர்மா

ஸ்ரீ ராமகிருஷ்ணர் – ஒரு தீர்க்கதரிசி
வெ. சாமிநாத சர்மா

கடவுளோடு இரண்டறக் கலந்து வாழக் கூடிய பக்குவம் பெறாதவர்கள், கடவுளோடு கலந்து வாழ்கின்றவர்களோடவாவது வாழ முயற்சி செய்ய வேண்டும் என்று சொல்வார்கள் அறிஞர்கள். இப்படி முயற்சி செய்தால் நமது மனம் ஒழுங்குபடும். அது, தன்னுடைய இஷ்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்லாமல் நம்முடைய இஷ்டத்திற்கு அது வரும். அப்படி வருமானால் அதனைக் கடவுளின் பக்கம் திருப்பலா மல்லவா? இதனாலேயே சத் சங்கம் வேண்டுமென்று சொல்கிறார்கள் பெரியோர்கள்.

ஸ்ரீ ராமகிருஷ்ணர், கடவுளைக் கண்ட ஒரு மகா புருஷர். இவரைப் பற்றிச் சொல்வது கடவுளைப் பற்றிச் சொல்வதாகும். இவரை அறிவது ஹிந்து மதத்தை அறிவதாகும். ஹிந்து மதமானது யாரையும் அந்நியர் என்று கருதுவதில்லை. எல்லோரும் ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகள் என்றே ஹிந்து மதம் அநாதிகாலந் தொட்டு கோஷித்துக் கொண்டு வருகிறது. இந்தக் கோஷம் உலகெங்கும் பரவவேண்டும். பலவித வேற்றுமைகளுக்கும் குழப்பங்களுக்கும் ஆட்பட்டிருக்கிற இன்றைய உலகத்திற்கு ஹிந்து மதத்தின் சாரத்தை ஊட்டுவது பிரதியொரு ஹிந்துவினுடைய கடமையுமாகும். இந்தக் கடமையைச் செய்வதற்கு இந்தச் சிறிய நூல் ஒரு தூண்டு கருவியா யிருக்குமானால் அது யான் பெற்ற பேறாகும்.

இந்த நூலை எழுத வேண்டுமென்று என்னை ஊக்கிய அன்பர் ஸ்ரீ அரு.சொக்கலிங்கம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

வெ. சாமிநாதன்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *