வேங்கடம் முதல் குமரி வரை (நான்காம் பாகம்)
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

நன்றி உரை

எனது தல யாத்திரைக் கட்டுரைகள் கிட்டத்தட்ட இருபத்தெட்டு மாதங்கள் தொடர்ந்து ‘கல்கி’யில் வெளிவந்தன. இந்த இருபத்தெட்டு மாதங்களில் 120 தலங்களுக்குச் சென்று அங்குள்ள கோயில், கோயிலில் உள்ள மூர்த்தி, சிற்பச் செல்வங்கள் எல்லாவற்றையும் கண்டு வந்திருக்கிறோம். வாசக நேயர்கள் சிரமமில்லாமலேயே இத்தனை தல யாத்திரைகளையும் மானசீகமாகச் செய்து முடித்திருக்கிறார்கள். வாசகர்களை இத்தனை தலங்களுக்கும் அழைத்துச் செல்ல நான் இருபது வருஷ காலமாக இந்த யாத்திரையைச் செய்திருக்கிறேன். அன்பர் பலர், அதிலும் பெண் மக்கள் பலர் இத்தலயாத்திரைக் கட்டுரைகளைக் கூர்ந்து படித்திருக்கிறார்கள். பலர் பாராட்டிக் கடிதங்கள் எழுதி உற்சாகப் படுத்தியிருக்கிறார்கள், இன்னும் வடநாட்டுத் தலங்களுக்கும் இப்படி ஒரு யாத்திரை தொடங்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இறை அருள் கூட்டுவித்தால் அந்த யாத்திரையையுமே தொடங்குவோம், கொஞ்ச நாட்கள் கழித்து. கல்கி ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்தப் பணி சிறப்புடன் நிறைவேற உதவிய வேங்கடவனுக்கும் கன்னிக்குமரிக்கும் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முற்றும்.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !