Category ஆன்மீகம்

திருவெம்பாவை – கி. வா. ஜகந்நாதன்

திருவெம்பாவை கி. வா. ஜகந்நாதன் பாவை நோன்பு தமிழ்நாட்டில் நவராத்திரிக் காலத்தில் பெண்கள் பசுவைப் போல ஒரு பொம்மை செய்வது உண்டு. அதற்கு அலங்காரம் செய்து, கோலாட்டம் போட்டு வீடுதோறும் எண்ணெய், பணம் முதலியவற்றை வசூல் செய்வார்கள். அதுபோல் பழங்காலத்தில் மார்கழி மாதம் முழுவதும் நெய், பால் முதலியவை உண்ணாமல் விரதம் இருந்து தை மாதத்தில்…

இராமன் கதை – பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி

இராமன் கதைபிரான்ஸிஸ் கிங்ஸ்பரி 1. பிறப்பும் இளமையும் ஆரியவர்த்தத்திலே கங்கையாற்றுக்கு வடக்கே உள்ளது கோசலை நாடு. அதற்கு இராசதானி அயோத்தி. அங்கே தசரதன் என்னும் வேந்தர்வேந்தன் பல்லாண்டு செங்கோல் செலுத்திவந்தான். அவன் அறங்கிடந்த நெஞ் சினன், மன்னுயிரைத் தன்னுயிர் போல நேசிப்பவன், கொடையிற் கற்பகத்தை வென்றவன், பொய்க்குப் பகை, மெய்க்கு அணி, புகழுக்கு வாழ்வு. இவனுக்கு…

சமரச தீபம் – திரு.வி. கலியாணசுந்தரனார்

சமரச தீபம்திரு.வி. கலியாணசுந்தரனார் உலகம்‌ இப்பொழுது எந்நிலையில்‌ இருக்கிறது? அதைச்‌ சொல்லலும்‌ வேண்டுமோ! உலகம்‌ இயற்கைச்‌ சன்மார்க்கத்தி னின்றும்‌ வழுவிச்‌ செயற்கைத்‌ துன்மார்க்கத்தில்‌ வீழ்ந்து வருகிறது. இது கண்கூடு. இவவீழ்ச்சிக்கு அடிப்படையான காரணம்‌ என்னை? மக்கள்‌ அறியாமையால்‌ அரசியலுக்கும்‌, புரோகிதத்துக்கும்‌ அடி மைப்பட்டு இரையாகி வருவதைச்‌ சிறந்த காரணமாகக்‌ குறிக்கலாம். ஆங்காங்குள்ள அரசியல்‌ வாதிகள்‌, பேர்‌,…

குசேலர் சரிதம் – சி. கணேசையர்

குசேலர் சரிதம் சி. கணேசையர் குசேலர் சரிதம் என்னும் இந்நூற்கு முதனூல் தமிழிலே, வல்லூர்த் தேவராச பிள்ளையால் இயற்றப் பட்ட குசேலோபாக்கியானம் என்னும் நூலாகும். அஃது செய்யுள் நடையில் இயற்றப்பட்டதாதலின் கற்றோ ரன்றி மற்றோரால் எளிதிலுணர்ந்து பயன்பெற முடியாததாகும். அதனால் அதனை, ஓர் உரை நடை நூலாக எழுதின் யாவர்க்கும் பயன்படுமென்று கருதி, அவ்வாறே இதனை…

இன்பவாழ்வு – திரு. வி. கலியாணசுந்தரனார்

இன்பவாழ்வு திரு. வி. கலியாணசுந்தரனார் ‘இயற்கை வாழ்வே இன்ப வாழ்வு’ என்பது பழந் தமிழர் கொள்கை. அன்னார் இயற்கையோடு கலந்த இன்ப வாழ்வை நடத்தினவர் என்பதைப் பண்டைத் தமிழ் நூல்களில் இன்னுங் காணலாம். இடைக்காலத்தில் பழந்தமிழர் கொள்கை வீழ்த்தப்பட்டது. அன்று தொட்டு நாடு உரிமையுணர்விழந்து வறுமைக்கும் பிணிக்கும் இரையாகி நரகத்துன்பத்தில் வீழ்ந்து கிடக்கிறது. மீண்டுந் தமிழ்நாடு…

ஆனந்தக் குமரன் – ரா. பி. சேதுப்பிள்ளை

ஆனந்தக் குமரன்ரா. பி. சேதுப்பிள்ளை சென்னை ‘ஆனந்தபோதினி’ மாதப்பதிப்பிலும், காரைக்குடி ‘குமரன்’ வாரப்பதிப்பிலும் பத்தாண்டுகளுக்கு முன்பு நான் எழுதியிருந்த இலக்கியக் கட்டுரைகளில் இருபத்திரண்டைத் தொகுத்து ‘ஆனந்தக்குமரன்’ என்னும் பெயரால் வெளியிட்டுள்ளேன். கட்டுரைகளில் பழமையும் புதுமையும் விரவியிருத்தலால் பழமை பாராட்டுவோர்க்கும் புதுமை பார்ப்போர்க்கும் இந்நூல் ஏற்புடையதாகும் என்றெண்ணுகிறேன். ‘ஆனந்தக்குமரனை’ ஆர்வமுற எடுத்து அச்சிட்டுதவிய காஞ்சி ‘தமிழ்க்கலை’ ஆசிரியரும்…

தமிழ் நூல்களில் பௌத்தம் -திரு. வி. கலியாணசுந்தரனார்

தமிழ் நூல்களில் பௌத்தம் திரு. வி. கலியாணசுந்தரனார் மனிதன் விலங்கினின்றுந் தோன்றினவன். அவனை விலங்கினின்றும் பிரிப்பது சமயம். விலங்கு+ சமயம் = மனிதன். எனவே மனிதனுக்குச் சமயம் இன்றி யமையாதது. அச்சமயம் ஒன்றா? பலவா? மெய்யறிவு விளங்கப் பெற்றவர்க்கும், அவ்வறிவுண்மையைக் கலையறிவால் உணர்ந்து, அதைக் குறிக்கொண்டு நிற்பவர்க்கும் சமயம் ஒன்றே. மெய்யறிவு விளக்கமாதல் நாட்டமாதல் பெறாதார்க்குச்…

வேலும் வில்லும் – ரா. பி. சேதுப் பிள்ளை

வேலும் வில்லும் ரா. பி. சேதுப் பிள்ளை வீரவேல் முருகனுக்கு உரியது; வல் வில் இராமனுக்கு உரியது. முன்னாள் அறந்திறம்பிய அவுணரை அழித்தது முருகன் வேல்; இரக்கமற்ற அரக்கரை அறுத்தது இராமன் வில். ஆதலால். ‘வேலுண்டு வினை யில்லை; வில்லுண்டு பயமில்லை’ என்றிருப்பர் நல்லோர். கொடியவரை அறித்து, அடியவரை ஆதரிக்கும் வேலின் செம்மையும், வில்லின் பெருமையும்…

தமிழ்நாட்டவரும்மேல்நாட்டவரும் – மறைமலையடிகள்

தமிழ்நாட்டவரும் மேல்நாட்டவரும் மறைமலையடிகள் ஓம் நம் தமிழ்நாட்டவர் பொருளையுந், தமிழ் நாட்டையடுத்துள்ள மற்றை இந்தியநாட்டவர் பொருளையும் மேல்நாட்டவர் பல வழியிற் கவர்ந்து செல்கின்றார் என்னுங் கூக்குரல் ஒலியும், அதனைத் தடை செய்து அந்நாட்டவரின் பொருள் இங்கேயே நிலைபெறுமாறு செய்தல் வேண்டின் அயல் நாட்டவர் இங்கே விலைப்படுத்தக் கொண்டு வரும் பண்டங்களை வாங்காது முற்ற ஒழித்தலே செயற்பாலதென்னும்…

வாழ்க்கைக் கூத்து – கி. வா. ஜகந்நாதன்

வாழ்க்கைக் கூத்து கி. வா. ஜகந்நாதன் அருணகிரிநாதர் முருகனுடைய திருவருளால் புலமை பெற்றவர்; கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர்; அவன் திருவருளால் பிரபஞ்சச் சேற்றைக் கழுவித் தூய ஆனந்த வாரியில் ஆழும் பேறு பெற்றவர்; தாம் பெற்ற இன்பத்தை உலகமும் பெற வேண்டும் என்ற கருணை உடையவர். அந்தக் கருணையினால் பாடிய பாடல்களே திருப்புகழ், கந்தர் அலங்காரம்,…