

கண்ணன் கதை
சுத்தானந்த பாரதியார்
பதிப்புரை
யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார் அவர்கள் இயற்றிய “கண்ணன் கதை” என்னும் இக் குறுஞ்சுவடி கண்ணபிரான் வரலாற்றுடன், கீதோபதேசத்தையும் சுருக்கமாக விளக்குகிறது. கண்ணன் கீதை, இந்தியாவின் பொதுமறையாய் விளங்கு கிறது. இவ்வன்பு மலர் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியாகிய இன்று, கண்ணனின் காணிக்கையாக வெளிவருகிறது.
அன்பு நிலயத்தார்.



