
தமிழ் வளர்கிறது
நாரா. நாச்சியப்பன்
கவிஞரும் கவிதையும்
கவிஞர் நாரா. நாச்சியப்பன் அவர்கள் இன்றைய கவிஞர்களில் சிறப்பிடம் பெறுபவர் ஆவர். பன்னி ரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பொன்னி இதழ் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்திய பாரதிதாசன் பரம்பரையினருள் கவிஞர் நாச்சியப்பன் குறிப்பிடத் தக்கவராவர். முத்து என்ற சிறுவர் இதழின் ஆசிரி யராக இருந்தவர். பல கவிதை நூற்களைத் தமிழ் நாட்டுக்குத் தந்த சிறப்புடையவர்.கொய்யாக்காதல் என்ற சிறு காவியம் தமிழ்த்தாயின் சிறந்த அணி யாகத் திகழ்கிறது. கவிதை உலகில் இவருக்கு நல்ல பேரும் புகழும் உண்டு.
தமிழ் வளர்கிறது: இக் கவிதை தமிழ் வளர்ப்ப தாகக் கூ றி க் கேடு செய்பவர்களுக்குச் சரியான பாடம். நல்ல ஓட்டமும் தெளிவும் பொருந்திய பாடல்களை இதில் காணலாம்.
பாரதியார், பாரதிதாசன்: இவை தமிழ் வளர்த்த பெரியார்களைப் பற்றிய நல்ல சொற்சித்திரங்கள். ஆற்று நீரென ஒடும் கவிதைப் பெருக்கத்தை இப்பாடல்களில் காண முடிகிறது.
புதிய தமிழ்நாடு: கவிஞர் கனவுலகில் காண விழையும் இந்நாடு கனவுலகில் செயற்படுமாயின் தமிழர்களைவிடச் சிறந்தவர்கள் உலகில் வேறு எங்குமே இருக்க முடியாது இவருடைய கவிதை வெள்ளத்திலே சில சுவைத் துளிகள் இவை. மீதியை நீங்களே அள்ளிப் பருகுங்கள்.
-பொன்விளக்கு
★ ★ ★



