
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
சுத்தானந்த பாரதியார்
13. தேவியின் கொள்கைகள்
தேசிகவிநாயகம் பிள்ளை பழம்பெரும் புலவர் ; பழைய நன்மைகளை விரும்புவார்; புதிய நன்மைகளையும் போற்றுவார். மூடக் கொள்கைகளை அவர் பலமாகக் கண்டிக்கிறார்.
பூவும் வேண்டாமே– பழமும்–பொரியும் வேண்டாமே ;
மேவும் உள்ளன்பே–தேவி–விரும்பும் நல்லமுதாம்.
குருடர் கூடிநின்று—கற்பூரம் –கொளுத்திக் காட்டுவதால் சிறிதும் நன்மையுண்டோ?–இதனைச்சிந்தனை செய்வாயே!
கூவிப் பறக்குமொரு–கிளியினைக் –கூண்டில் அடைத்து வைத் [தால்,
தேவர் உலகமெல்லாம்—அதுசினத்–தீயை எழுப்பிடுமே !
தேரைகள் ஓடையிலே– இனத்தொடு– சேர்ந்து மிதக்கையிலே, காரைகள் வந்திடவே – பாவிமனம் –நைந்து குழைந்ததடி!
சாதி சாதியென்று நிதம்–சண்டை போட்டு மண்டைகளை மோதி மோதி யுடைப்பதொரு –மூடச்செயலென் றுணரீரோ?
கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழில் சொல்லை மணியாகத் தொடுத்தவனும் நீதானோ?
ஆலயங்க ளேனையா? அபிஷேகங்கள் ஏனையா? கோலங்கொடிக ளேனையா? கொட்டுமுழக்க மேனையா?
பாலும் பழமும் வைத்துநிதம் பணிந்துநிற்ப தேனையா? சீலம்பேணும் உள்ளத்தைத் தெய்வம் தேடிவாராதோ?’
ஆம் என்று நம் உள்ளம் தேவிக்கு நன்றி கூறுகிறது!



