

ஆனந்தக் குமரன்
ரா. பி. சேதுப்பிள்ளை
சென்னை ‘ஆனந்தபோதினி’ மாதப்பதிப்பிலும், காரைக்குடி ‘குமரன்’ வாரப்பதிப்பிலும் பத்தாண்டுகளுக்கு முன்பு நான் எழுதியிருந்த இலக்கியக் கட்டுரைகளில் இருபத்திரண்டைத் தொகுத்து ‘ஆனந்தக்குமரன்’ என்னும் பெயரால் வெளியிட்டுள்ளேன். கட்டுரைகளில் பழமையும் புதுமையும் விரவியிருத்தலால் பழமை பாராட்டுவோர்க்கும் புதுமை பார்ப்போர்க்கும் இந்நூல் ஏற்புடையதாகும் என்றெண்ணுகிறேன். ‘ஆனந்தக்குமரனை’ ஆர்வமுற எடுத்து அச்சிட்டுதவிய காஞ்சி ‘தமிழ்க்கலை’ ஆசிரியரும் என் நண்பரும் ஆகிய வித்வான் அ. மு. பரமசிவானந்தர்க்கும் அச்சகத்தார்க்கும் எனது மனமார்ந்த நன்றி உரியதாகும்.
ரா. பி. சேதுப்பிள்ளை.



